முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி பிரச்சனைக்கு கோர்ட் மூலம் தீர்வு காண முடியாது

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

சேலம் மே.12​ - அயோத்தி பிரச்சனைக்கு கோர்ட் மூலம் தீர்வு காண முடியாது என சேலத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார். சேலம் மரவனேரியில் உள்ள காஞ்சி மடத்திற்கு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நேற்று காலை வருகை தந்தார். பின்னர் அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.அயோத்தி பிரச்சனைக்கு கோர்ட் மூலம் தீர்வு காணமுடியாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும்.இதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இது தொடர்பாக வரும் 14 ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நான் டெல்லி செல்கிறேன். இந்த பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு nullஜைகள் எல்லாம் நடத்தப்படுகின்றன.

முஸ்லீம் மதத்தில் உள்ள வக்புவாரியம் தன்னிச்சையாக செயல்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதை மறுசீரமைப்பு செய்து ஓய்வு பெற்று ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும், அதே போல் பக்தி மார்க்கத்தில் ஆர்வம் உள்ள ஒருவரையும் நியமித்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago