முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம்: முதல்-அமைச்சர இரங்கல்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்..21 - அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணமடைந்ததிற்கு முதல்-அமைச்சர ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார் . அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நல்லதம்பி, ராமநாதபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் ராமசாமி, ்ரோடு புறநகர் மாவட்டம், சத்திய மங்கலம் நகரச் கழகப் பொருளாளர் சுரேஷ், மதுரை புறநகர் மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம், பூசலப்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஒச்சாத்தேவர், திருநெல்வேலி மாநகர் வட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 7-வது வார்டு கழகச் செயலாளர் கொடி முத்து ஆகியோர் மரண செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரம் அடைந்தேன்.

அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்