முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலுக்கு எதிர்ப்பு: விக்ரமன் கார் டிரைவர் தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப். 25 - டைரக்டர் விக்கிரமனின் கார் டிரைவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சினிமா டைரக்டர் விக்ரமன் அலுவலகம் கே.கே. நகர் ஆர்.கே. சண்முகம் சாலையில் உள்ளது.

விக்ரமனிடம் திருநெல்வேலியை சேர்ந்த முருகன் (25) கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். டிரைவிங் நேரம் தவிர மற்ற நேரங்களில் விக்ரமன் அலுவலகத்தில் முருகன் தங்கி இருப்பார். அவருடன் சங்கர் என்பவரும் தங்கி இருந்தார்.

நேற்று சங்கர் வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்த அறைக்கு திரும்பினார். அறைக்கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அசோக்நகர் உதவி கமிஷனர் அசோக்குமார் மற்றும் கே.கே. நகர் போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அறையில் முருகன் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் கிடைத்ததும் விக்ரமனும் அங்கு வந்தார்.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முருகன் சொந்த ஊரில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். மேலும் சென்னையில் ஒரு துணை நடிகையையும் காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்