முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.தி.மு.க. உயர்நிலை கூட்டம் வைகோ தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 25 - ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் வைகோ தலைமையில் கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில்நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ம.தி.மு.க. தனது இருபது ஆண்டு கால அரசியல் பயணத்தில், இடைவிடாத போராட்டங்களால், மகத்தான தியாகத்தால், தன்னலமற்ற நேர்மை நெறியால், கணக்கற்ற அல்லல்களையும் இன்னல்களையும் எதிர் கொண்டு, நாட்டு மக்கள் கவனத்தை ஈர்க்கின்ற அரசியல் கட்சியாக இயங்குகிறது.

ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் ாசுதந்திரத் தமிழ் ஈழம்தான் தீர்வுா என்பதைத் திட்டவட்டமாகப் பிரகடனம் செய்து, அந்த விடியலை இலக்காகக் கொண்டு செயலாற்றுவதால், தமிழகத்திலும் தரணி எங்கும் தன்மானம் உள்ள தமிழர்கள் நெஞ்சில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்று இருக்கிறது.

மது எனும் கொடிய அரக்கனின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ாஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு வாழ்வாதாரங்களுக்கும் கேடும் துரோகமும் செய்து வரும் ஊழல் சாம்ராஜ்யமாகிவிட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து, அதிகாரப் பீடத்தில் இருந்து அகற்றுவது ஒன்றே நமது உடனடி இலக்கும் கடமையும் ஆகும்ா என்று விருதுநகர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் சூளுரைத்ததை முனைந்து செயலாற்ற தீர்மானிக்கப்பட்டது.

ாமக்களிடம் செல்ா என்ற அண்ணா மணிவாசகத்தை மனதில் நிறுத்தி, தமிழக மக்களிடம் நாட்டு நலனைக்காக்கும், ஜனநாயகக் கடமையாற்றவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 'மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை' பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது.

அதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்டச் செயலாளர்கள் முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்