முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒத்தக்கடையில் அ.தி.மு.க.வினர் தண்ணீர் பந்தல் திறந்தனர்

வியாழக்கிழமை, 12 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர்,மே.12 - மதுரை ஒத்தகடையில் மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், அம்மா பேரவை மாவட்ட செயலாளரும் கா.தமிழரசன் ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட தண்ணீர் பந்தலை மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மு.முத்துராமலிங்கம் தொடங்கிவைத்தார்.

விழாவில் கிழக்கு தொகுதிசெயலாளர் இளங்கோவன், ஒத்தக்கடை ஏ.சேகர், வழக்கறிஞர் கோபி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தே.மு.தி.க. திருஞானம், சரவணன், ஆர்.கே.ராஜாமணி, ஆழத்தூர் முருகோசன் மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்த தண்ணீர், மோர் பந்தலில் அக்னி வெயிலில் வாடிவந்த ஏழை பொதுமக்களுக்கு தர்பூசணி, சர்பத், மோர் மற்றும் தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டனர். இதை அருந்திய பொதுமக்களிடம் கேட்டபோது தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும், கிழக்கு தொகுதியில் கா.தமிழரசன் வெற்றி பெற்று வருகின அனைத்து காலங்களில் இதுபோல் பல நலத்திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்