முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர்களுக்கு உதவிகளை செயல்படுத்த தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, செப்.28 - இலங்கைத் தமிழர்களுக்கான உதவிகளை அங்கு தற்போது அமைந்துள்ள வடக்கு மாகாண அரசு மூலம் இந்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  மற்ற தீர்மானங்கள்:

நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுகத்கு  முழு ஆதரவு தர வேண்டும்.  மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். 

இந்து ஏழை மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகை  வழங்க வேண்டும் என்று கோரி பாஜக நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவளித்த இளைஞர்களுக்கு நன்றி. மாணவர் சமூகம் பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும். தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சியை இந்திய அரசு தடுக்க வேண்டும்.

தமிழர்களுக்கான அனைத்து உகவிகளையும் வடக்கு மாகாண அரசு மூலம் செயல்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும். தமிழக மீனவர்களை துன்புறுத்தி வரும் இலங்கையின்செயல்பாடுகளை இந்திய அரசு தடுக்க வேண்டும்.

கச்சத்தீவின் உரிமையை முழுமையாகத் திரும்பப் பெறும் நடவடிக்கை.யில் இந்தியா ஈடுபட வேண்டும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதோடு தமிழக அரசின் வருவாயைப் பெருக்க வேறு வழிகளை ஆராய வேண்டும்.

பாஜக மற்றும் இந்து தலைவர்கள் கொல்லப்பட்டு வருவதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்