எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.28 - நவராத்திரி விற்பனை கண்காட்சியினை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கிராம அங்காடிகள், கல்லூரி சந்தைகள் மற்றும் மாநில அளவிலான கண்காட்சிகள் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்களின் விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடவும், வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்திடவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் நோக்கிலும், விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடவும் சென்னையில் பல்வேறு சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (26.09.2013) சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் மேளா-2013 நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மைச்செயலாளர் ச.வி.சங்கர், முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சி 26.09.2013 முதல் 17.10.2013 வரை, காலை 10.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறும். அனைத்து பண்டிகை விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விற்பனை நடைபெறும்.
2013 செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், நவராத்திரி கொலு பொம்மைகள், தரமான வீட்டு உபயோகப் பொருட்கள், வண்ண வண்ண பருத்தி மற்றும் பட்டு ஆடைகள், மங்கையர் மனம் மயக்கும் செற்கை ஆபரணங்கள், காகிதம், சணல், களிமண் ஆகியவற்றினால் செய்யப்பட்ட பொம்மைகள், புளி, தேன், ராகி, சாமை, ரோஸ் குல்கந்து மற்றும் மூலிகைப் பொருட்கள், சுவை மிகுந்த உணவுகள், தேங்காய் நாரினால் தயாரிக்கப்பட்ட மிதியடிகள், லெதர் பொருட்கள், செராமிக் பொருட்கள், மண் பொம்மைகள், மரப் பொருட்கள், மிதியடிகள், பனை ஓலை பொருட்கள், சுடிதார் மெட்டிரியல்ஸ், மூங்கில் பொருட்கள், நறுமணப் பொருட்கள், கொல்லிமலைப் பொருட்கள், கடல் சிற்பி பொருட்கள், குத்து விளக்குகள், பூஜைப் பொருட்கள், வெள்ளை உலோகப் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், பத்தமடை பாய் பொருட்கள், மஸ்கோத் அல்வா மற்றும் ஆரோவில் பொருட்கள் விற்பனைச் செய்யப்படுகின்றன.
இக்கண்காட்சிஇயல் பொருட்களை விற்பனை செய்திட 32 மாவட்டங்களில் இருந்தும் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவுக் குழுக்கள் தயாரிக்கும் பாரம்பரிய சுவை மிகுந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் புதுவாழ்வுத் திட்டம், பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி திட்டம் (ஐ.எப்.ஏ.டி) திட்டத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்களும், மற்றும் திருநங்கையர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் இக்கண்காட்சியில் விற்பனை அரங்குகளை அமைத்து தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
மேலும் இக்கண்காட்சியில் மதிப்பு கூடுதல் நிகழ்வாக நவராத்திரி கண்காட்சியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் விற்பனை மட்டுமின்றி விற்பனை சார்ந்த மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல தலைப்புகளில் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு நாளும் பங்கேற்பாளர்களுக்கு தலைப்பிற்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட வளபயிற்றுநரின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறவுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்திப் பொருட்களின் மகளிர் மேளா-2013 நவராத்திரி விற்பனைக் கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பிரத்யேகமாக தயாரித்துள்ள தரமான கொலு பொம்மைகள், கலைப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நேர்த்தியான பட்டு, பருத்தி மற்றும் கைத்தறி ஆடைகள், மங்கையருக்கான ஆபரணங்கள் ஆகியவை மிக நியாயமான விலையில் பொதுமக்கள் வாங்கி பயன்பெறும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் நவராத்திரி கண்காட்சிக்கு வருகை புரிந்து மகளிர் விற்பனை செய்யும் பொருட்களை வாங்கி அவர்களது பொருளாதார நிலை உயர்வதற்கு ஒரு உந்துகோலாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் மைதிலி.க.ராஜேந்திரன், கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.