இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

மதுரை, செப் 29 - தமிழ்நாட்டில் அண்ணா விரும்பிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி தந்தவர் தழிழக முதல்வர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ,தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின்ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டி நகர் அ.தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 105-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் கே. ஆர். ராஜா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தழிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் சிறப்புரையாற்றினார் மற்றும் இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்பட்டணம் (எ) நைனா முகமது, மாவட்ட கழகச் செயலாளர் ம. முத்துராமலிங்கம்,எம்.எல்.ஏ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் க. தவசி,மகேந்திரன்,பாண்டியம்மாள்,தொகுதி கழகச்செயலாளர் நீதிபதி,ஒன்றியக்கழக செயலாளர் கே.சி. மாயன்,மாவட்ட கழக நிர்வாகிகள் பஞ்சவர்ணம்,பி. அய்யப்பன்,யு.பி.ஆர்.பஞ்சம்மாள்,மாவட்ட அணி நிர்வாகிகள் வேலுச்சாமி,போத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எஸ்.டி.கே.ஜக்கையன் பேசியதாவது,
பேரறிஞர் பெருந்தகை அண்ணாஅவர்களின் 105-வது பிறந்த நாள் விழா பட்டி தொட்டி எங்கும் அவரின் புகழை பறை சாற்றும் வண்ணம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க கொண்டாடப்பட்டு வருகின்றது. பேரறிஞர் அண்ணாஅவர்கள் சிறந்த பேச்சாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும், மனிதநேய பண்பாளராகவும், இது போன்ற பன்முக பரிமாணம் கொண்ட தலைவராக விளங்கியவர்.தமிழ்நாடும் தமிழ் மக்களும் தமிழ் மொழியும் பாதிப்புக்குள்ளான சமயத்தில் தமிழ்நாட்டையும் தமிழ்மக்களையும் விழிப்படையச் செய்து தமிழ் மக்களுக்கு உரிய உயர்வையும் தமிழ்மொழிக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியதுடன் தமிழ்மொழியின் புகழை உலகம் முழுவதும் பரவும் வகை செய்து அயராது பாடுபட்டவர் நம் அண்ணா அவர்கள்.
காங்கிரஸ் இயக்கம் தமிழகத்தில் ஆண்டபோது மிட்டாமிராசு தான் ஆட்சி பொறுப்பில் வரும் சூழ்நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி ஏழை எளிய சாமானியர்கள் எல்லாம் கோட்டை கொத்தளத்தில் அமர வைத்து அழகு பார்த்தவர் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள். அதேபோல் அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக அதாவது தலைவர், தொண்டன் என்ற நிலையை மாற்றி அண்ணன் தம்பி என்ற உறவை நிலை நாட்டினார். அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின் சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து வரலாற்றுத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இப்படிப்பட்ட இயக்கத்தை குறுக்கு வழியில் வந்து தன் சுயநலத்திற்காக கருணாநிதி சீரழித்து அண்ணா புகழை அழித்து வந்ததை கண்டு புரட்சித்தலைவர் அவர்கள் அண்ணாவின் கொள்கைகளை காப்பாற்ற அண்ணா பெயரில் கட்சியை ஆரம்பித்து அண்ணாவின் புகழை பரப்பினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியதை கண்டு அப்போத பாரதப்பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அப்படியே மெய் சிலிர்த்து அண்ணாவை பாராட்டினார். அதேபோல் அம்மா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி பேரறிஞர் அண்ணா அமர்ந்த அதே இருக்கையில் அமர்ந்து தன்னுடைய கன்னிப்பேச்சால் அவையில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். அப்போது பாரதப்பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் இந்த பேச்சை போல் நான் எங்கும் கேட்டதில்லை என்று அம்மாவை பாராட்டினார். இப்படி நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணாவும், புரட்சித்தலைவி அம்மாவும் தங்களின் பேச்சுதிறமையால் தமிழகத்திற்கு புகழை சேர்த்தனர். ஆனால் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சராக இருந்து எந்த கேள்விக்கும் பதில் பேச தெரியாமல் வாய்மூடி மவுனியாக இருந்து மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய களங்கத்தை தந்தவர் தான் கருணாநிதி மகன் அழகிரி.அண்ணா அவர்களின் குடும்பம் வறுமையில் வாடுவதை கண்டு அம்மா அவர்கள் அண்ணாவின் துணைவியார் ராணி அம்மாள் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியது மட்டுமல்லாமல் அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அதன்மூலம் கிடைத்த 75 இலட்சம் ரூபாயை அண்ணாவின் துணைவியாரிடம் வழங்கினார். ஆனால் கருணாநிதியோ தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கூட அண்ணாவின் பெயரை வைத்தது கிடையாது. மேலும் அண்ணாவின் பெயரை சொல்லியே அதன்மூலம் புத்தகம் போட்டு அந்த வருமானத்தை தன் குடும்ப கஜானாவில் சேர்த்தவர் தான் கருணாநிதி. பேரறிஞர் அண்ணா அவர்கள் கொள்கைப்படி சாமானிய மக்கள் பொருளதாரத்தில் உயரும் வண்ணம் பல்வேறு திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றி சாமானிய மக்களை இன்று அம்மா அவர்கள் பொருளாதாரத்தில் உயர்த்தி உள்ளார்கள். தமிழ்நாட்டில் அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை கண்டு மற்ற மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களுக்கு இதை வழங்க அங்கிருக்கும் அரசு உயரதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பி ஆலோசனைகளை பெற்று செல்கின்றார்கள்.பள்ளிக்கல்வித்துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் உயர்கல்வித்துறைக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் என கல்வித்துறைக்காக மட்டும் 21 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். 1 முதல் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம்இ காலணிஇ சீருடை உட்பட 14 வகையான பொருட்களை வழங்கியுள்ளார்கள். இரண்டு ஆண்டுகளில் 52 அரசு கல்லூரிகளை அம்மா அவர்கள் துவங்கியுள்ளார்கள். மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியதின் மூலம் இந்த ஆண்டில் கூடுதலாக 1 இலட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்;ந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் அண்ணா அவர்கள் விரும்பிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி தந்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் .
அண்ணா அவர்கள் படி அரிசி திட்டத்தை கோவையிலும், சென்னையிலும் கொண்டு வந்தார். ஆனால் நிதிப்பற்றாக்குறையால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் இன்று அண்ணாவின் கனவை நனவாக்கும் வகையில் 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை அம்மா அவர்கள் வழங்கி வருகிறார்கள். இந்தியாவில் உள்ளமாநிலங்களில்தமிழகத்தில் தான் முழு உணவு பாதுகாப்பு உள்ளது. இது மட்டுமல்லாது பேரறிஞர் அண்ணா வகுத்த மத்தியில் கூட்டாட்சி மாநில சுயாட்சி என்ற கொள்கைக்கு எதிராக மத்திய காங்கிரஸ் அரசு திகழ்ந்து வருகிறது. தமிழகத்திற்கு நியாயமான முறையில் வழங்க வேண்டிய நிதி, மண்ணெண்ணெய் அளவு, மின்சாரம் போன்றவற்றை தர மறுப்பதுடன் தமிழகத்தின் ஜீவதார உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் அம்மா அவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக போராடி மீட்டு வருகிறார். பேரறிஞர் அண்ணா வகுத்த மாநில சுயாட்சி கொள்கைகளை பறித்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கருணாநிதிக்கு வரும் தேர்தலில் நிச்சயம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மற்றும் தமிழ்நாட்டிற்கு வழங்கும் திட்டங்களை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவில் வாழும் மக்கள் இத்திட்டம் தங்கள் மாநிலத்திற்கு வர வேண்டும் என்றால் அம்மா அவர்கள் பாரத பிரதமராக வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் 40 இடங்களில் அமோக வெற்றி பெற்று அம்மா அவர்கள் பாரத பிரதமராகி இந்திய தேசத்தை உலக அரங்கில் வல்லரசாக உருவாக்கி காட்டுவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
------------------------------------------------------------------------
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 day 6 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 4 days 6 hours ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-29-01-2023
29 Jan 2023 -
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் 14 பேர் பலி: ரஷ்யா குற்றச்சாட்டு
29 Jan 2023நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
29 Jan 2023புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.
-
திரிபுரா சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்., பா.ஜ.க,
29 Jan 2023அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு புனே ; நான் அமைச்சராவேன் என்று ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மகராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வெளி
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா: குஜராத்தில் ஒருவர் பலி
29 Jan 2023புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
இளவரசி டயானாவின் ஆடை ரூ. 4.9 கோடிக்கு விற்பனை
29 Jan 2023நியூயார்க் ; சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.
-
ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் : ம.பி. முதல்வர் அறிவிப்பு
29 Jan 2023போபால் : பொருளாதார ரீதியில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்