எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, செப் 29 - தமிழ்நாட்டில் அண்ணா விரும்பிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி தந்தவர் தழிழக முதல்வர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ,தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின்ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டி நகர் அ.தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 105-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் கே. ஆர். ராஜா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தழிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் சிறப்புரையாற்றினார் மற்றும் இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்பட்டணம் (எ) நைனா முகமது, மாவட்ட கழகச் செயலாளர் ம. முத்துராமலிங்கம்,எம்.எல்.ஏ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் க. தவசி,மகேந்திரன்,பாண்டியம்மாள்,தொகுதி கழகச்செயலாளர் நீதிபதி,ஒன்றியக்கழக செயலாளர் கே.சி. மாயன்,மாவட்ட கழக நிர்வாகிகள் பஞ்சவர்ணம்,பி. அய்யப்பன்,யு.பி.ஆர்.பஞ்சம்மாள்,மாவட்ட அணி நிர்வாகிகள் வேலுச்சாமி,போத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எஸ்.டி.கே.ஜக்கையன் பேசியதாவது,
பேரறிஞர் பெருந்தகை அண்ணாஅவர்களின் 105-வது பிறந்த நாள் விழா பட்டி தொட்டி எங்கும் அவரின் புகழை பறை சாற்றும் வண்ணம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க கொண்டாடப்பட்டு வருகின்றது. பேரறிஞர் அண்ணாஅவர்கள் சிறந்த பேச்சாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும், மனிதநேய பண்பாளராகவும், இது போன்ற பன்முக பரிமாணம் கொண்ட தலைவராக விளங்கியவர்.தமிழ்நாடும் தமிழ் மக்களும் தமிழ் மொழியும் பாதிப்புக்குள்ளான சமயத்தில் தமிழ்நாட்டையும் தமிழ்மக்களையும் விழிப்படையச் செய்து தமிழ் மக்களுக்கு உரிய உயர்வையும் தமிழ்மொழிக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியதுடன் தமிழ்மொழியின் புகழை உலகம் முழுவதும் பரவும் வகை செய்து அயராது பாடுபட்டவர் நம் அண்ணா அவர்கள்.
காங்கிரஸ் இயக்கம் தமிழகத்தில் ஆண்டபோது மிட்டாமிராசு தான் ஆட்சி பொறுப்பில் வரும் சூழ்நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி ஏழை எளிய சாமானியர்கள் எல்லாம் கோட்டை கொத்தளத்தில் அமர வைத்து அழகு பார்த்தவர் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள். அதேபோல் அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக அதாவது தலைவர், தொண்டன் என்ற நிலையை மாற்றி அண்ணன் தம்பி என்ற உறவை நிலை நாட்டினார். அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின் சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து வரலாற்றுத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இப்படிப்பட்ட இயக்கத்தை குறுக்கு வழியில் வந்து தன் சுயநலத்திற்காக கருணாநிதி சீரழித்து அண்ணா புகழை அழித்து வந்ததை கண்டு புரட்சித்தலைவர் அவர்கள் அண்ணாவின் கொள்கைகளை காப்பாற்ற அண்ணா பெயரில் கட்சியை ஆரம்பித்து அண்ணாவின் புகழை பரப்பினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியதை கண்டு அப்போத பாரதப்பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அப்படியே மெய் சிலிர்த்து அண்ணாவை பாராட்டினார். அதேபோல் அம்மா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி பேரறிஞர் அண்ணா அமர்ந்த அதே இருக்கையில் அமர்ந்து தன்னுடைய கன்னிப்பேச்சால் அவையில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். அப்போது பாரதப்பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் இந்த பேச்சை போல் நான் எங்கும் கேட்டதில்லை என்று அம்மாவை பாராட்டினார். இப்படி நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணாவும், புரட்சித்தலைவி அம்மாவும் தங்களின் பேச்சுதிறமையால் தமிழகத்திற்கு புகழை சேர்த்தனர். ஆனால் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சராக இருந்து எந்த கேள்விக்கும் பதில் பேச தெரியாமல் வாய்மூடி மவுனியாக இருந்து மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய களங்கத்தை தந்தவர் தான் கருணாநிதி மகன் அழகிரி.அண்ணா அவர்களின் குடும்பம் வறுமையில் வாடுவதை கண்டு அம்மா அவர்கள் அண்ணாவின் துணைவியார் ராணி அம்மாள் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியது மட்டுமல்லாமல் அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அதன்மூலம் கிடைத்த 75 இலட்சம் ரூபாயை அண்ணாவின் துணைவியாரிடம் வழங்கினார். ஆனால் கருணாநிதியோ தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கூட அண்ணாவின் பெயரை வைத்தது கிடையாது. மேலும் அண்ணாவின் பெயரை சொல்லியே அதன்மூலம் புத்தகம் போட்டு அந்த வருமானத்தை தன் குடும்ப கஜானாவில் சேர்த்தவர் தான் கருணாநிதி. பேரறிஞர் அண்ணா அவர்கள் கொள்கைப்படி சாமானிய மக்கள் பொருளதாரத்தில் உயரும் வண்ணம் பல்வேறு திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றி சாமானிய மக்களை இன்று அம்மா அவர்கள் பொருளாதாரத்தில் உயர்த்தி உள்ளார்கள். தமிழ்நாட்டில் அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை கண்டு மற்ற மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களுக்கு இதை வழங்க அங்கிருக்கும் அரசு உயரதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பி ஆலோசனைகளை பெற்று செல்கின்றார்கள்.பள்ளிக்கல்வித்துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் உயர்கல்வித்துறைக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் என கல்வித்துறைக்காக மட்டும் 21 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். 1 முதல் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம்இ காலணிஇ சீருடை உட்பட 14 வகையான பொருட்களை வழங்கியுள்ளார்கள். இரண்டு ஆண்டுகளில் 52 அரசு கல்லூரிகளை அம்மா அவர்கள் துவங்கியுள்ளார்கள். மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியதின் மூலம் இந்த ஆண்டில் கூடுதலாக 1 இலட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்;ந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் அண்ணா அவர்கள் விரும்பிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி தந்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் .
அண்ணா அவர்கள் படி அரிசி திட்டத்தை கோவையிலும், சென்னையிலும் கொண்டு வந்தார். ஆனால் நிதிப்பற்றாக்குறையால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் இன்று அண்ணாவின் கனவை நனவாக்கும் வகையில் 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை அம்மா அவர்கள் வழங்கி வருகிறார்கள். இந்தியாவில் உள்ளமாநிலங்களில்தமிழகத்தில் தான் முழு உணவு பாதுகாப்பு உள்ளது. இது மட்டுமல்லாது பேரறிஞர் அண்ணா வகுத்த மத்தியில் கூட்டாட்சி மாநில சுயாட்சி என்ற கொள்கைக்கு எதிராக மத்திய காங்கிரஸ் அரசு திகழ்ந்து வருகிறது. தமிழகத்திற்கு நியாயமான முறையில் வழங்க வேண்டிய நிதி, மண்ணெண்ணெய் அளவு, மின்சாரம் போன்றவற்றை தர மறுப்பதுடன் தமிழகத்தின் ஜீவதார உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் அம்மா அவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக போராடி மீட்டு வருகிறார். பேரறிஞர் அண்ணா வகுத்த மாநில சுயாட்சி கொள்கைகளை பறித்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கருணாநிதிக்கு வரும் தேர்தலில் நிச்சயம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மற்றும் தமிழ்நாட்டிற்கு வழங்கும் திட்டங்களை கண்டு ஒட்டுமொத்த இந்தியாவில் வாழும் மக்கள் இத்திட்டம் தங்கள் மாநிலத்திற்கு வர வேண்டும் என்றால் அம்மா அவர்கள் பாரத பிரதமராக வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் 40 இடங்களில் அமோக வெற்றி பெற்று அம்மா அவர்கள் பாரத பிரதமராகி இந்திய தேசத்தை உலக அரங்கில் வல்லரசாக உருவாக்கி காட்டுவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
------------------------------------------------------------------------
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.