எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பழனி செட்டிபட்டியில் இன்று (28.09.2013) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்போடுகள்; மற்றும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கி, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்ற உலக தரம் வாய்ந்த கல்வியினை ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பொருட்டு மாநிலத்தின் மொத்த வருவாய்யில் நான்கில் ஒரு பகுதி நிதியினை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்து, சிறப்பாகவும் செம்மையாகவும் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்தும் வகையில், மாணவ, மாணவியர்களின் ஏழ்மையின் காரணமாக அவர்களின் கல்வி எந்த ஒரு சுூழ்நிலையிலும் தடைபடக் கூடாது என்பதற்காக கல்வி ஊக்கத்தொகை, விலையில்;லா பாட புத்தகம், நோட்டுப்புத்தகம், வருடத்திற்கு நான்கு செட் சீருடைகள்;, காலணிகள், புத்தகப்பை, வடிவியல் பெட்டிகள், வரைப்பட புத்தகங்கள், கிரையான்ஸ், கணித உபகரணங்கள், மிதிவண்டிகள், பேரூந்து பயணஅட்டை, 13 வகையான கலவை சாதம், மேல்நிலைப்பள்ளியில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு உலக அறிவை எளிதில் பெறும் வகையில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு மாதாந்திர உதவித்தொகையினை ரூ.500ஃ-லிருந்து ரூ.1000ஃ-மாக உயர்ததி வழங்கிட உத்தரவிட்டார்கள் அதனடிப்படையில் தமிழகத்தில் இதுவரைக்கும் 34 இலட்சம் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை வழங்கி மாபெரும் சாதனை நிகழ்த்தி வருகிறார்கள். ஏழை எளியோர்களுக்கு 1 கோடியே 73 இலட்சம் விலையில்லா வேஷ்டிகளும், 1 கோடியே 72 இலட்சம் சேலைகளும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பெற்று வழங்கப்படுகிறது. மேலும் பெண்களின் வேலைப்பழுவினை குறைக்கும் விதமாக தகுதி வாய்ந்த 1 இலட்சத்தி 84 ஆயிரம குடும்ப அட்டைதாரர்களுக்கு; விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கி பெண்களின் சமுதாய முன்னேற்றமடைய வழிவகை செய்துள்ளார்கள். தனிமனித வருமானம் பெருகினால் குடும்ப பொருளாதாரம் முன்னேற்றமடையும், குடுப்ப பொருளாதாரம் பெருகினால் கிராம பொருளாதாரம் முன்னேறும். இதன்மூலம் ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வழி வகை செய்யும்.
மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில், இந்தியாவிலலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 பொறியியல் கல்லூரிகளையும், 36 கலை மற்றும அறிவியல் கல்லூரிகளையும், 12 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 2 கால்நடை மருத்துவக் கல்லூரி உட்பட மொத்தம் 54 கல்லூரிகள் திறக்கப்பட்டு தமிழகத்தில் கல்விப்புரட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நிகழ்த்தி உள்ளார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் 1 பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான கட்டுமானப்பணி ரூ.96 கோடி மதிப்பிலும் நடைபெற்று வருகின்றது. மேலும், புதிதாக தொழிற் பயிற்சி நிலையம் அமைத்திட ரூ.6ஃ- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீரபாண்டி பேரூராட்சியில் தற்காலிகமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளத்தில் செவிலியர் கல்லூரியை துவங்குவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மாணவ, மாணவியர்களின் கல்விக்காக எண்ணற்ற பலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள் எனவே, மாணவ, மாணவியர்கள் படிப்பது ஒன்றே தனது கடமையாக கொண்டு தனக்கும் தனது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
பெரியகுளம் கல்வி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த 1765 மாணவர்களுக்கும், 1569 மாணவியர்களுக்கும் என மொத்தம் 3334 மாணவ, மாணவியர்களுக்கும், பெரியகுளம் வட்டத்தைச் 1501 மாணவர்களுக்கும், 1637 மாணவியர்களுக்கும் என மொத்தம் 3138 மாணவ, மாணவியர்களுக்கும், உத்தமபாளையம் கல்வி வட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தைச் சேர்ந்த 1240 மாணவர்களுக்கும், 1428 மாணவியர்களுக்கும் என மொத்தம் 2668 மாணவ, மாணவியர்களுக்கும், கம்பம் வட்டத்தைச் சேர்ந்த 1996 மாணவர்களுக்கும், 1848 மாணவியர்களுக்கும் என மொத்தம் 3844 மாணவ, மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 12984 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 75980 மாணவ, மாணவியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்குரிய விலையில்லா பாடபுத்தகங்களையும், பாடக்குறிப்பேடுகளையும் மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ், 22,283 குழந்தைகளுக்கு ரூ.27,85,375ஃ- மதிப்பிலான விலையில்லா இரண்டு ஜோடி வண்ண சீருடைகளை மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.சோமுபாண்டியன் வரவேற்புரையாற்றினர். மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.எஸ்.மாகலிங்கம், நகர்மன்றத்தலைவர்கள் திரு.சிவக்குமார்,; திரு.முருகேசன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் திரு. எம்.பி.இராமர், திரு.செல்லமுத்து, திரு.தீபாவளிராஜ், திருமதி.அம்சகோமதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு. என்.ஆண்டி, பழனி செட்டிபட்டி பேரூராட்சித்தலைவர் திரு. பாலசுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.வாசு, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) திரு.இராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முடிவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி. ராஜரரஜேஸ்வரி நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.