முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு இடற்படி உயர்வு

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.செப்,29 ​- சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அதிகாரி, போலீசாருக்கு இடற்படியை (ரிஸ்க் அலவன்ஸ்) உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 23.4.13 அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வழங்கப்படும் இடற்படி இரண்டாயிரம் ரூபாயில் இருந்து மூவாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 

இதனடிப்படையில், தமிழக அரசுக்கு டி.ஜி.பி. முன்மொழிவு அனுப்பினார். அதை ஏற்றுக்கொண்டு உள்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்ட்டி அரசாணை பிறப்பித்துள்ளார்.அதில், 'டி.ஜி.பி.யின் முன்மொழிவை அரசு கவனமுடன் பரிசீலித்து, சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வழங்கப்படும் இடற்படியை இரண்டாயிரம் ரூபாயில் இருந்து மூவாயிரம் ரூபாயாக உயர்த்த அரசு உத்தரவிடுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.29 லட்சம் ஒதுக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்