முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் காங்., தனித்துப் போட்டியிட இளங்கோவன் விருப்பம்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை  செப்30 - தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் இளங்கோவன் விருப்பம் தெரிவித்துள்ளார் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் மகளிர் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: குற்ற வழக்குகளில் சிக்கிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவிகளைக் காப்பாற்றும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டம் குறித்து ராகுல்காந்தி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. முக்கியமான நேரத்தில் துணிச்சலுடன் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மக்களின் எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அதுவே எங்கள் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. தேவை ஏற்பட்டால் புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்