Idhayam Matrimony

டாக்டர் கொலை வழக்கில் கோவையில் இருவர் சரண்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

கோவை, செப்.30 - சென்னையில் டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் கோவையில் இருவர் சரணடைந்தனர். சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுப்பையா அபிராமபுரத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.  இவர் மருத்துவமனை அருகே வந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த சுப்பையா இறந்தார். அவர் இறக்கும் தருவாயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ரூ.15 கோடி மதிப்பிலான சொத்து சம்பந்தமாக எனது ஒன்றுவிட்ட சகோதரர் பொன்னுச்சாமிக்கும், எனக்கும் பிரச்சனை இருந்து வந்தது என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் பாசில், அவரது சோகதரர் மோரிஸ் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பாசிலின் தந்தை பொன்னுச்சாமி, தாயார் மேரி புஷ்பம் ஆகியோர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் சரணடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் இந்த தம்பதி மீது குற்றம் உள்ளதா என்று தெரியவில்லை. அவர்கள் சென்னை போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்