முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை வீரர்களுக்கு எதிராக போராட்டம்: மாணவர்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை செப் 30 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களுக்குத் தடை விதிக்கக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 40 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்நிலையில் காலை 10.30 மணிக்கு அந்த பகுதிக்கு வந்த 40_க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹோட்டலுக்குள் நுழைய முயன்றனர்.அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், முற்றுகைப் போராட்டத்தில் <டுபட்ட மாணவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அவர்களை போலீஸார் விடுவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்