முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார வெள்ளிக் கிழமைகளில் இனி அம்மா திட்ட முகாம்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 3 - அம்மா திட்ட முகாம் இனி வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. இத்திட்டத்தின்படி வருவாய்த் துறை அலுவலர்கள், வட்டாட்சியர் தலைமையிலான குழு வாரம் தோறும் ஒரு கிராமத்துக்கு சென்று மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று ஆய்வு செய்து உடனடியாக ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் 6 மாதத்தில் 16,671 வருவாய் கிராமங்களுக்கும் சென்று குறைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த செப்டம்பர் 28 ம் தேதி வரை 32,69,952 மனுக்கள் பெறப்பட்டு 26,78,140 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை செவ்வாய் கிழமை நடைபெற்று வந்த அம்மா திட்ட முகாம் இனி வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்