முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் பி.வி.ரமணா தந்தை மரணம்: முதல்வர் இரங்கல்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.4 - அமைச்சர் பி.வி.ரமணா தந்தை மரணம் அடைந்துவிட்டார். அவரது மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி.வி.ரமணாவின் தந்தை   ஆ.பக்தவச்சலுவின் மறைவையடுத்து, பி.வி.ரமணாவுக்கு  அனுப்பிய இரங்கல் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:_

தங்களின் அன்புத் தந்தை ஆ.பக்தவச்சலு உடல் நலக் குறைவின் காரணமாக 3.10.2013 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் •குந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். 

இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும்,  அதைத்  தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், பக்தவச்சலுவின்ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும்  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பக்தவச்சலுவை இழந்து வாடும் தங்களுக்கும்,  தங்கள்  குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்