முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை நிறுவனத்தில் மும்பை போலீசார் அதிரடி சோதனை

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.அக்.4 - பங்கு மார்க்கெட் மோசடி வழக்கு ஒன்றில், மும்பை போலீசார் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர மேத்தா தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸ் படையினர், நேற்று முன்தினம் சென்னை வந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம், <.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள ஜோஷி டவர் கட்டிடத்தில் செயல்படும், பிரபல பங்கு தரகு நிறுவனத்தில் ஒரு நாள் முழுக்க அதிரடி சோதனை வேட்டை நடத்தினார்கள்.

மும்பையில் நடந்த பங்கு சந்தை மோசடி தொடர்பாக போடப்பட்ட வழக்கில், இந்த சோதனை நடைபெற்றதாகவும், இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், யாரையும் கைது செய்யவில்லை என்றும் மும்பை போலீசார் தெரிவித்தனர்.

சென்னையில் முகா•ட்டிருந்த மும்பை போலீசார், நேற்று முன்தினமே   மும்பை புறப்பட்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்