முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 பாக். தீவிரவாதிகள் பதிலடி கொடுத்ததும் தப்பியோட்டம்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், அக். 4 - இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை நடத்த கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர். குறிப்பாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் தீவிரவாதிகள் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த மாதம்24 ம் தேதி காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கேரன் பகுதியில் சுமார்40 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் பாகிஸ்தான் ராணுவ சிறப்பு படையினரும் கலந்து இருந்தனர். அவர்களை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தி அடித்து விரட்டினர். இருந்தாலும் தலா10 பேர்கொண்ட சிறு சிறு குழுக்களாக பிரிந்து பல இடங்களில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். 26 ம் தேதி தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி பல முறை நடந்தது. அப்போது நடந்த சண்டையில்12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்றாலும் தீவிரவாதிகள் ஓயவில்லை. தொடர்ந்து மீண்டும் மீண்டும் கேரன் பகுதியில் ஊடுருவ திரண்டு வருகின்றனர். இதனால் காஷ்மீர் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரன் பகுதியில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கேரன் பகுதியில் உள்ள ஒரு சிறு கிராமத்தை தீவிரவாதிகள் பிடித்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. என்றாலும் எல்லையில் தீவிரவாதிகள் அலை அலையாக வருவதை இந்திய ராணுவம் ஒத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கேரன் பகுதியில்12 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. நேற்று முன்தினமும் அத்துமீறல் காணப்பட்டது. இதனால் தொடர்ந்து நேற்றுடன்10 வது நாளாக பதட்டம் நீடித்துள்ளது. எல்லையில் உள்ள தலைவலி ஒருபக்கம் நீடிக்கும் நிலையில் மற்றொரு பக்கம் ஸ்ரீநகர் பிராந்தியத்திற்குள்ளும் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில்5 போலீசார் உட்பட12 பேரை சுட்டுக் கொன்ற4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இன்னமும் பிடிபடாமல் உள்ளனர். ஸ்ரீநகர் அருகே உள்ள கவுராவில் அகமத் நகரில் நேற்று முன்தினம் மாலை தீவிரவாதி ஒருவன் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக அந்த வீட்டிற்கு சென்று தீவிரவாதிகள் சரணடைய எச்சரித்தனர். அப்போது திடீரென அந்த தீவிரவாதி கையெறி குண்டை போலீசார் மீது வீசினான். இதில்4 போலீசார் படுகாயமடைந்தனர். இதை தொடர்ந்து ராணுவ வீரர்கள் விரைந்தனர். தீவிரவாதிக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த வீட்டுக்குள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்திய போது தீவிரவாதி தப்பி சென்றது தெரியவந்தது. தப்பியோடிய தீவிரவாதி லஸ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago