முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

லாகூர், அக். 12 - பாகிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது குறித்து உள்துறை அமைச்ர் ஆஸாத் கிலானி கூறுகையில், 

பலுசிஸ்தான் மாகாணத்தின் கட்டா காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு சுமார் 6 கிலோ கிராம் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்துள்ளனர் என்றார் அமைச்சர். இதே போன்று லாகூர் சந்தையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பெஷாவர் அருகே மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற வெடி பொருட்கள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்கள் மூன்று பேரும் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்