முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் பயங்கரம்: கார் குண்டு வெடித்து 36 பேர் பலி

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், அக். 15 - ஈராக் முழுவதும் பல்வேறு இடங்களில் கார் குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 36 பேர் பலியாயினர். 

பக்ரீத் பண்டிகைக்கு முன்பாக நடந்துள்ள இந்த தாக்குதல் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈராக்கில் ஜியா பிரிவு முஸ்லீம்களை குறி வைத்து தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் கார் குண்டுகள் வெடித்து சிதறின. ஷாப்பிங் ஏரியா மற்றும் பஸ் நிலையங்களில் இந்த தாக்குதல்கள் நடந்தன. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 95 கி.மீ. தொலைவில் உள்ள தில்லா நகர மார்க்கெட்டில் கார் குண்டுகள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாயினர். 22 பேர் படுகாயமடைந்தனர். சுரையா நகரில் மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உடல் சிதறி பலியாயினர். இது போல கட்சமாவா, திவானியா நகரங்களிலும் அடுத்தடுத்து குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். சமாரா நகரில் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் நடந்த தாக்குதலில் 2 பேர் இறந்தனர். மேலும் இதே இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலியாயினர். பஸ்ரா, முகமதியா, பாக்தாத் நகரங்களில் குண்டுகள் வெடித்தன. இவற்றில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் கார் குண்டுகளை பயன்படுத்துவது அல்கொய்தா பாணி என்பதால் அந்த அமைப்புதான் குண்டுவெடிப்புகளை நடத்தியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்