முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்குள் நுழைந்த 16 சீனர்கள் கைது

புதன்கிழமை, 16 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 17 - இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக திபெத்தியர்கள் உள்ளிட்ட 16 சீன தேசத்தவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 

இந்திய சீன எல்லைப் பகுதியில் இவர்கள் பாதுகாப்பு படையினரால் பிடிபட்டனர். பிடிபட்ட 16 பேரில் 6 பேர் திபெத்தியர்கள். இவர்கள் அருணாசல பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிபட்டவர்கள். திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய்லாமாவை சந்திப்பதற்காக இவர்கள் இந்தியாவுக்கு வந்ததாக தெரிகிறது. மேலும் 3 சீனர்கள் மருத்துவ மூலிகையை தேடி இந்திய பகுதிக்குள் வந்தார்களாம். பிடிபட்ட இவர்களில் 7 பேர் கொடி சந்திப்பின் போது சீன அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 6 பேர் வலுக்கட்டாயமாக நமது பாதுகாப்பு படையினரால் சீன பகுதிக்குள் திருப்பி அனுப்பப்பட்டனர். எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரமாக இருந்த போதிலும் கூட ஊடுருவல் என்னவோ தொடர்ந்து நடக்கத்தான் செய்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்