முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். முதல்வர்களை தேர்வு செய்ய பார்வையாளர்கள் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.15 - கேரளா-அசாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முதல்வர்களை தேர்வு செய்ய மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி சொர்ப்ப மெஜாரிட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் முதல்வர்கள் தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடம் பார்வையாளர்களை நியமித்துள்ளது. கேரள மாநிலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மதுசூதன் மிஸ்திரி மற்றும் மோஷினா கித்வாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளத்தில் உம்மன் சாண்டி அல்லது ரமேஷ் சென்னிதாலா ஆகியோர்களில் யாராவது ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அசாம் மாநிலத்திற்கு பார்வையாளர்களாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் தரூண் கோகாய் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்