முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பேன் - சரத்குமார்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை மே.15 -​ அ.தி.மு.க. ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று சரத்குமார் கூறினார். தென்காசியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். அங்கு தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு கிடைத்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். அதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

205 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியிருந்தேன் அதன்படியே நடத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

ஊழல், விலைவாசி உயர்வு, மின்சார தடை, அடிப்படை வசதி போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கியுள்ளார்.

திரைப்படத்துறை சுந்திரமாக இயங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு மவுனமாக உள்ளது. அதை நாங்கள் கண்டிக்கிறோம். ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தவேண்டும். 

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

முன்னதாக நடிகர்கள் ராதாரவி, செந்தில், விஜயகுமார், மயில்சாமி, நடிகைகள், மனோரமா, சத்யப்ரியா, குயிலி, சி.ஐ.டி. சகுந்தலா, புவனனேஸ்வரி, இயக்குனர் அமீர், கே.ஆர்.,  ஏ.எம்.ரத்னம், சேரன், பாபுராஜ், சித்ரா லட்சுமணன், முருகன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.நடிகர்கள் பிரபு, சத்யராஜ் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்