முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த்: புறக்கணிக்கக் கோரி லண்டனில் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், நவ.4 - காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்கக் கோரி லண்டனில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். காமன்வெல்த் நாடுகளின் 23_வது மாநாடு வரும் 10_ம் தேதி முதல் 15_ம் தேதி வரை கொழும்பு நகரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழர்கள் எதிரப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் கண்டனப் பேரணி நடத்தினார்கள். இந்தப் பேரணி எண்பேங்க்மென்ட் அருகிலிருந்து புறப்பட்டு பிரதமரின் டவுனிங் ஹால் தெருவில் முடிவடைந்தது. இந்த மாநாட்டை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இளவரசர் சார்லஸ் ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேரணியில் கோஷங்களை எழுப்பினர்.  இதில் ஆயிரக்கணக்கான தமிழவ்கள் கலந்து கொண்டனர். 

       

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்