முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய_பாக். ராணுவத்தினர் தீபாவளி இனிப்பு பரிமாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

வாஹா,நவ.4 - தீபாவளியை முன்னிட்டு இந்தியா எல்லைப்பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்பு படையினரும் தீபாவளி இனிப்பு பரிமாறிக்கொண்டனர். 

ஜம்மு_காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது. மேலும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவி செய்து வருவதோடு தீவிரவாதிகள் ஊடுருவ ஆயுத உதவியும் செய்து வருகிறார்கள். இதனால் இந்திய_பாக்.ராணுவத்தினர்களிடையே துப்பாக்கிச்சண்டை அடிக்கடி நடந்து வருகிறது. 

ஜம்மு_காஷ்மீர் பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் மோதல்போக்கு இருந்தபோதிலும் பஞ்சாப் மாநிலத்தையொட்டி பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருக்கும் சர்வதேசகோடு அருகே வாஹா எல்லையில் இருநாட்டு  எல்லைப்பாதுகாப்பு படையினர் தீபாவளி இனிப்பை பரிமாறிக்கொண்டனர். இந்திய எல்லைப்பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி.டிபி ஜோசப் மற்றும் படையினர் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த கமாண்டர் மொகமத் அசீர் கான் மற்றும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். வாஹா எல்லைப்பகுதியில் அமைதி நிலவுவதை இது காட்டுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்