முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயித்த பிறகு தான் நிம்மதி - ஸ்ட்ராஸ்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

நாக்பூர், பிப். 24 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதி ரான ஆட்டத்தில் ஜெயித்த பிறகு தான் நிம்மதி ஏற்பட்டது என்று இங்கிலாந்து அணியின் கேப்டனான ஸ்ட்ராஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது -
நாங்கள் எப்படி வெற்றி பெற்றோம் என்பது முக்கியமல்ல. வெற்றி பெற்றோம் என்பது தான் முக்கியம் . இருப்பினும் கடைசியில் வெற்றி கிடைத்த பிறகு தான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.
நல்ல தொடக்கத்தை கொடுத்த பிறகும், கடைசி 10 ஓவர் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது. களம் நல்ல முறையில் இருந்ததால் வெற்றி பெற முடியும் என நம்பிக்கை இருந்தாலும் நெதர்லாந்து வீரர்கள் சிறப்பான நெருக்கடியை கொடுத்தார்கள்.
கடைசி கட்டத்தில் டென் டாஸ்சேட்டே அசத்தினார். இப்படியெல் லாம் விளையாடினால் ஞாயிற்றுக் கிழமை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக் மற்றும் அவரது நண்பர்களை எதிர்கொள்வது கடினம்.
இந்த ஆட்டத்தை பார்த்த இந்தியா உண்மையிலேயே எங்களை மிக எளிதாக எதிர்கொள்ளும். எனவே, வீரர்கள் பந்து வீச்சு மற்றும் பீல்டி ங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வா று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்