முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதையில் பைக் ஓட்டிய 3 போலீசார் சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.17 - போதையில், எஸ்.பி.யின் காருக்கு முன் கூச்சலிட்டு பைக் ஓட்டிச்சென்ற மூன்று போலீஸ்காரர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுரை பட்டாலியன் போலீஸ்காரர்கள் பிரகாஷ் (21) மதன்ராஜ் (22), கார்த்திக் (21) இவர்கள் மூவரும் அளவு கடந்த மது போதையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு, ஒரே பைக்கில் ரிசர்வ் லைன் நோக்கி பயங்கர வேகத்தில் வந்தனர். பைக்கை பிரகாஷ் ஓட்டினார். அப்போது எஸ்.பி. அஸ்ரா கார்க், தனது காரில் நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார். முன்னால் செல்வது எஸ்.பி.யின் கார் என்று தெரியாமல் விடாமல் ஹாரன் அடித்துக்கொண்டு, பலத்த கூச்சல் போட்ட படியே, காரைஅனாயசமாக முந்தினர்.

அதிகாலை மூன்று பேர் அளவு கடந்த வேகத்தில் பைக்கில் செல்வதைக் கண்ட எஸ்.பி., அவர்களை பின்தொடந்ர்தார். செக்போஸ்ட் போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.  இதையடுத்து நத்தம் சாலை, ரிசர்வ்லைன் செக்போஸ்ட் அருகே கண்காணிப்புப்பணியில் இருந்த போலீசார், பைக்கை மடக்கி நிறுத்தினர். சிறிது நேரத்தில் எஸ்.பி.யும் அந்த இடத்திக்கு வந்து சேர்ந்தார்.

போதையில் பிடிபட்ட மூன்று போலீசாருக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு போதைசோதனை நடத்தப்பட்டது. இதில், மூன்று பேரும் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மூன்று போலீசார் மீதும் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே மூன்று போலீசாரும் நேற்று காலை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்