எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.- 18 - ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு இலவச தாலி தங்க திட்டம் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அன்று மாலையில் கோட்டைக்கு சென்று முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இதில் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த பல்வேறு அறிவிப்புகளில் சிலவற்றை அன்றைய தினம் செயலாற்றுவதற்கான கையெழுத்திட்டு அறிவித்தார்.
தமிழகத்தின் 14 வது சட்டசபைக்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 13 ம் தேதி நடந்தது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தொடர் மின்வெட்டு, அனைத்து பொருட்களின் விலைகள் உயர்வு என தமிழகத்தின் அனைத்து மக்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்படைந்து வந்தனர். மேலும் வசதி படைத்தவர்கள், மேலும் மேலும் வசதி படைத்தவர்களாகவும், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவும் ஆக்கப்பட்டனர். தி.மு.க.வில் ஒரு குறிப்பிட்டவர்களும், மேலிடத்தின் செல்வாக்கை பெற்றவர்களும் கோடி கோடியாக சம்பாதித்து மிகப் பெரிய செல்வந்தர்களாகி விட்டனர்.
இது தவிர தி.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளரான ராசா, ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் ரூ. 1.76 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்தார். இந்த ஊழலுக்கு கூட்டு சதியாக கருணாநிதியின் மகள் கனிமொழியும் அந்த ஊழல் தொடர்பாக கலைஞர் டி.விக்கு ரூ. 200 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால் ராசா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தவிர தி.மு.க.வினரின் அராஜகங்கள், அத்துமீறல்கள் ஆகியவற்றால் தமிழக மக்கள் மிகவும் கோபமடைந்திருந்தனர். எப்போது தேர்தல் வரும் என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 13 அன்று தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் மக்கள் தி.மு.கவுக்கு எதிராக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மே 13 அன்று வாக்குகள் எண்ணப்பட்டது.
முடிவுகள் வெளியானதில் இருந்து அ.தி.மு.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்றது. இதை டி.வியில் பார்த்த பெண்களும், வெற்றி செய்தியை அறிந்தவர்ளும், பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், பேன், தாலிக்கு தங்கம், 20 கிலோ அரிசி கிடைத்து விட்டது போன்று மகிழ்ச்சியடைந்தனர். கிராமத்தில் இருந்தவர்ளோ, ஆடு, மாடுகள் கிடைத்து விடும் என்றும் மாணவர்கள் லேப்டாப் கிடைத்து விடும் என்றும் மகிழ்ந்தனர். இது தவிர தொழிலதிபர்களோ மின்வெட்டுக்கு தீர்வு கிடைத்து விடும். தொழிலை வளர்ச்சியடைய செய்து லாபம் சம்பாதித்து விடலாம் என்றும் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல்களில் இருந்து விடுபட்டு விட்டோம் என போலீசாரும் மகிழ்ச்சியடைந்தனர். அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. மட்டும் தனித்து 146 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
மே 16 அன்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற பின்னர் எந்த திட்டத்தை அறிவிக்கப் போகிறார் என மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் பதவியேற்பு விழா முடிவதற்கு பகல் 2 மணிக்கு மேலாகி விட்டதால் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், மந்திரிகள் ஆகியோருக்கு மரியாதை செய்யும் வகையில் மதிய உணவு அளிக்க ஜெயலலிதா சென்று விட்டார். அதன் பின்னர் அன்றைய தினம் கோட்டைக்கு சென்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக 4 சவரன் தங்கம் இனாமாக அளிக்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். அதனை அடுத்து இளநிலை பட்டம் பெற்ற அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த திருமண உதவித் தொகையான ரூ. 25 ஆயிரத்தை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தியும், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவினால் கைவிடப்பட்ட பெண்களுக்கான மாத உதவித் தொகையை ரூ. 500 லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தியும், பொது விநியோக திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா, அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும், தமிழகத்தின் கடலோர மீன் வளத்தை பாதுகாக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில் வருமானமின்றி தவிக்கும் மீனவர் குடும்பத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. ஆயிரம் உதவித் தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் ஆணை பிறப்பித்து அதற்கான கோப்பிலும் அரசு பணியாற்றும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று ஆணை பிறப்பித்து அதற்குரிய கோப்பிலும் அரசினுடைய சிறப்பு திட்டங்களை கவனிப்பதற்காக, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை என்ற ஒரு புதிய துறையை துவக்கி அதற்கான கோப்பிலும் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.
இதன் மூலம் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் தொடக்கத்தை முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்துள்ளார். தேர்தலில் வெற்றி செய்தி அறிவிக்கப்பட்டவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயலலிதா, 18 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அவர் அறிவித்தார். அவரது அறிவிப்பின்படி தேர்தல் வாக்குறுதிகள் முதல் கட்டமாக அமுலுக்கு வந்துள்ளது. மற்ற அனைத்து திட்டங்களும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டது போல் 18 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்பது உறுதியாகி விட்டது.
ஏற்கனவே 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு சென்று பவுன் ஒன்றுக்கு 18 ஆயிரம் வரை விற்பனையானது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்குவதை தவிர்த்து தங்களது குழுந்தைகளுக்கு தங்கம் என பெயர் வைத்து மகிழ வேண்டிய அவல நிலையில் இருந்தனர். இந்த நிலையில் தேர்தலில் வெற்ற முதல்வர் ஜெயலலிதா, தாலிக்கு இலவச தங்கம் திட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது தவிர, இலவச அரிசி உட்பட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் அனைத்து மக்களும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெண்கள் சிலர் கூறியதாவது,
ராமேஸ்வரி: டெய்லர், மதுரை:
தி.மு.க ஆட்சியில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுத்தார்கள். ஆனால் சாப்பாட்டுக்கு குழம்பு வைப்பதற்கு ரூ. 50 தேவைப்பட்டது. அரிசியை மட்டும் ஒரு ரூபாய்க்கு கொடுத்து விட்டு மற்ற பொருட்கள் அனைத்தும் அதிகளவு விலை உயர்ந்து விட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் குடும்பம் நடத்துவது மிகுந்த கஷ்டமாக இருந்தது. ஒரு வீட்டில் கணவன் மட்டும் வேலைக்கு சென்றால் போதாது என்ற நிலை ஏற்பட்டு மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டியதிருந்தது. அப்படியிருந்தும் வாரத்திற்கு இரு முறை மட்டுமே காய்கறிகளை சமைக்கும் நிலை ஏற்பட்டது. முன்பெல்லாம் வாரத்திற்கு இருமுறை அசைவம் சாப்பிட்ட நிலை மாறி அந்நிலையில் காய்கறி சாப்பாடு என்ற நிலை உருவாகியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் எதுவுமே தீட்டப்படவில்லை. இதனால் என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே இல்லை. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. எனது கணவர் மற்றும் எனது சம்பளம் எங்களது குடும்ப செலவுக்கே போதுமானதாக இல்லை. இந்நிலையில் எனது மூத்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயித்துள்ளேன். இந்த வேளையில் ஜெயலலிதா முதல்வராகி தாலிக்கு தங்கம் இலவசமாக தருவதாக அறிவித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அது மட்டுமின்றி, குறிப்பாக விலைவாசிகளை கட்டுப்படுத்துவதாக அறிவித்திருப்பது ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது போல் உள்ளது.
சாந்தி: திருநகர்:
கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அரசு ஊழியர்களை பழிவாங்கியது போல இந்த முறை போலியாக தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பார். அதை நிறைவேற்ற மாட்டார் என பலர் கூறி வந்தனர். ஆனால் முதலமைச்சரான பின்னர் கொடுத்த வாக்குறுதிகளில் 6 ஐ நிறைவேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஜெயலலிதா வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார் என்று சொல்லியவர்களின் வாயை அடைத்தது போன்று ஜெயலலிதாவின் அறிவிப்புகள் உள்ளன. குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அரிசியை முன்பு 20 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியதிருந்தது. தற்போது அதுவும் இலவசமாக கிடைக்கிறது. இதுவரை ஏழை, நடுத்தர மக்களிடம் பணப்புழக்கமே இல்லாமல் இருந்து வந்த நிலையில், படித்த ஏழை பெண்களுக்கு திருமணத்திற்காக 4 சவரன் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பது ஏழை தாய்மார்களின் குடும்ப கஷ்டத்தில் பாதியை குறைத்தது போல் உள்ளது. முன்பெல்லாம் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு அதிகமாக செலவாகும் என எண்ணி ஒரு சில இடங்களில் கள்ளிப் பால் கொடுத்து கொன்று வந்தனர். அப்போது தொட்டில் குழந்தை திட்டம் என்ற ஒன்றை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தொடங்கினார். அதனால் பெண் சிசு கொலை முற்றிலும் தவிர்க்கப்பட்டது. தற்போது பெண்களின் சுமையை குறைப்பது போன்று இலவச தங்கம், 50 ஆயிரம் ரூபாய் பணம் அறிவித்திருப்பது சிசுவை மட்டுமின்றி கன்னிப் பெண்களையும் காப்பாற்றி உள்ளார். அடுத்ததாக முதியோர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் ரூ. ஆயிரம் உதவித் தொகை வழங்க இருப்பதன் மூலம் அவர்களது குடும்பங்களில் ஜெயலலிதா ஒளிவிளக்கை ஏற்றி வைத்துள்ளார். முதல் அறிவிப்பிலேயே ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வு உயர்வதற்கான திட்டங்கள் இடம் பெற்றிருப்பதால் இந்த 5 ஆண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏழைகளுக்கு பொற்காலமாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எம்.ஜி.ஆரின் நல்ல திட்டங்கள் போன்று ஜெயலலிதாவின் திட்டங்களும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.