எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.24 - வேலூர் பேருந்து நிலையத்திற்கான 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் தி.மு,க.வினருக்கு உறுதுணையாக இருந்து வருவதோடு பாதாள சாக்கடை திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கும் மைனாரிட்டி கருணாநிதி அரசை கண்டித்து நாளை (25.2.2011) அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கென அரசால் கையகப்படுத்தப்பட உள்ள 9.75 ஏக்கர் நிலம் தி.மு.க.வினரின் கைக்குப் போகும் நிலை உருவாகி உள்ளது. எனது ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 8.7 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதோடு, பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு தனியாருக்கு சொந்தமான 9.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து தனியாரால் சென்னை உயர் nullநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை மைனாரிட்டி தி.மு.க. அரசு ஏற்றது. இதனையடுத்து, நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்த சென்னை உயர் nullநீதிமன்றம், விதிகளுக்கு உட்பட்டு பொது நோக்கத்திற்காக நிலத்தினை கையகப்படுத்த அனுமதி அளித்து 2008ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, தனியாருக்கு சொந்தமான 9.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஆட்சியருக்கு கருத்துரு அனுப்புவது தொடர்பான தீர்மானம் வேலூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, இந்த நிலத்தை கையகப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மேற்படி 9.75 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு நில உரிமையாளரிடமிருந்து உள்ளூர் தி.மு.க. நபர் வாங்கிவிட்டதாகவும், மேற்படி நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை ரத்து செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, மாநகராட்சி ஆணையரிடம் கேட்கப்பட்டதற்கு, மாநகர் மன்றக் கூட்டத்தில் போடப்பட்ட ஒரு தீர்மானத்தை 6 மாதம் கழித்து ரத்து செய்ய முடியும் என்றும், புதிய இடத்தை கையகப்படுத்துவதற்கான நிதி மாநகராட்சியிடம் இல்லை என்றும், இந்தச் சூழ்நிலையில் அங்கு நடைபெறும் பணிகளில் தலையிட இயலாது என்றும், தற்போதுள்ள பேருந்து நிலையம் 25 ஆண்டுகளுக்குப் போதுமானது என்றும் பேட்டி அளித்திருக்கிறார். இது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்துள்ளது. மாநகராட்சி ஆணையரின் இந்தப் பேட்டி மக்களின் புகாரினை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. மக்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சினை ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள். பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், 30 விழுக்காடு பணிகள் கூட முடிவடையவில்லை என்றும், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் சாக்கடை நீnullர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாகவும், சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் அபகரிக்கப்படுவது குறித்தோ, பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிப்பது குறித்தோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மைனாரிட்டி தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, வேலூர் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டிருந்தும் தி.மு.க.வினருக்கு உறுதுணையாக செயல்படுகின்ற, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆமை வேகத்தில் மேற்கொண்டு இருக்கின்ற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், தி.மு.க.வினரின் நில அபகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், 25.2.2011 வெள்ளிக் கிழமை அன்று காலை 10 மணி அளவில், வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆதிராஜாராம் தலைமையிலும், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. சிவசங்கரன், வேலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வி. ரேணுகோபால் மற்றும் சத்துவாச்சாரி நகர அ.தி.மு.க. செயலாளர் ஏ.பி.எல். சுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.