முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மஞ்சள் காமாலையை பரப்பிய டாக்டருக்கு 39 ஆண்டு சிறை

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், டிச.4 - அமெரிக்காவில் ஊசி மூலம் மஞ்சள் காமாலை நோயை பரப்பிய டாக்டருக்கு 39 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அமெரிக்காவில் நியூஹம்ப்ஷியர் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் கியாட் கோவ்ஸ்கி.  இருதய டாக்டரான இவர் 3 மாகாணங்களில் 18 மருத்துவமநைகளில் மாறி, மாறிப் பணிபுரிந்து வந்தார். 

கடந்த 2011_ம் ஆண்டு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, அவரை போலீஸார் கைது செய்தனர். 46 பேருக்கு மஞ்சள் காமாலை நோஐ பரப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் தடை செய்யப்பட்ட மருந்துகளை பலருக்கு செலுத்தியதும், பல மருந்துகளை திருடியதும் தெரியவந்தது. 

இவர் வலி நிவாரண மருந்துகளைத் திருடி அதனுடன் ஆல்கஹாலைக் கலந்து கெட்டுப்போன ஊசி மூலம் நோயாளிகளின் உடலில் செலுத்தினார். அதனால் பலர் மஞ்சள் காமாலை, கல்லீரல் உள்ளிட்ட நோய் பாதித்து அவதிப்பட்டனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 39 ஆண்டுகள் தண்டனை விதித்தது.

               

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்