எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தர்மசாலா, மே 19 - ஐ.பி.எல். போட்டி ஒன்றில் வலுவான ராயல் சேலன்ஜர்ஸ் அணியை 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பரபரப்பை ஏற்படுத்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 63-வது போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலன்ஜர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் களமிறங்கின. டாசில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் பால் வல்தாட்டி ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் துவக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர். அணியின் எண்ணிக்கை 25 ஐ எட்டியபோது அதிரடி வீரரும் இந்த தொடரில் அதிக ரன்களை குவித்துள்ளவருமான வல்தாட்டி 20 ரன்கள் எடுத்த நிலையில் லாங்வெல்த்தின் பந்துவீச்சில் திவாரியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து கில்கிறிஸ்ட் உடன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வாண வேடிக்கைகளை காட்ட ஆரம்பித்தது. அதிலும் கில்கிறிஸ்ட் பந்துகளை பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் மாற்றி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார். இதனால் ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் பவுலர்கள் செய்வதறியாது திகைத்தனர். கில்கிறிஸ்ட் 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். மேலும் இவரது அணி 10 ஓவர்களிலேயே 100 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக கில்கிறிஸ்ட் மற்றும் மார்ஷ் இருவரும் சேர்ந்து 51 பந்துகளில் 100 ரன்களை குவித்தனர். மார்ஷ் 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில்கிறிஸ்ட் 53 பந்துகளில் சதமடித்தார். இந்த சதம் இந்த தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். இதே தொடரில் கிறிஸ் கெய்ல் 46 பந்துகளில் சதம் கடந்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக கில்கிறிஸ்ட், மார்ஷ் இருவரும் 96 பந்துகளில் 200 ரன்களை சேர்த்தனர். துவக்கம் முதல் சிறப்பாக விளையாடிய கில்கிறிஸ்ட் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5 வது பந்தில்தான் அவுட்டானார். 55 பந்துகளில் 106 ரன்களை குவித்திருந்த கில்கிறிஸ்ட், லாங்வெல்த்தின் பந்துவீச்சில் கிறிஸ்கெயிலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை குவித்தது. மார்ஷ் 79 ரன்களுடனும், ஹஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடித்த 232 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல். தொடரில் இது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும். சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்த 246 மற்றும் 240 ரன்களே ஐ.பி.எல்.லில் முதலிரண்டு அதிகபட்ச ஸ்கோர்களாகும்.
233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை ராயல் சேலன்ஜர்ஸ் அணி சேஸ் செய்தது. அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ்கெய்ல் மற்றும் திவாரி ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில் இரண்டாவது ஓவரை ஹாரிஸ் வீசினார். அந்த ஓவரின் 3 வது பந்தில் கிறிஸ்கெய்ல் அதிர்ச்சியளிக்கும் வகையில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. கடந்த 4 போட்டிகளில் அதிரடி காட்டி வந்த கெய்ல் இந்த போட்டியில் ஏமாற்றினார். அடுத்ததாக தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற விராட் ஹோக்ளி களமிறங்கினார். இவரும் 4 வது ஓவரின் முடிவில் ஹாரிஸின் பந்திலேயே கார்த்திக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது ராயல் சேலன்ஜர்ஸ் அணி 4 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக டி வில்லியர்ஸ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 34 ஐ எட்டியபோது ஸ்ரீவஸ்தவா வீசிய பந்தில் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு துவக்க வீரர் திவாரி ஆட்டமிழந்தார். இவர் எடுத்த ரன்கள் 6 மட்டுமே. இவரைத் தொடர்ந்து யூசுப் பதான், டி வில்லியர்சுடன் ஜோடி சேர்ந்தார். பதானும் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. 7 ரன்களை மட்டுமே எடுத்த இவர் பால் வல்தாட்டியின் பந்தில் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்த ராயல் சேலன்ஜர்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் ஆட்டம் பொறுப்பற்றதாய் இருந்தது. இதனால் அந்த அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தவண்ணம் இருந்தது. அந்த அணியின் டி வில்லியர்ஸ் மட்டுமே ஓரளவு சிறப்பாக விளையாடினார். ஆனால் இவரும் 34 ரன்களில் சாவ்லாவின் பந்தில் கில்கிறிஸ்ட்டால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனவுடன் ஓரளவு கெளரவமான ஸ்கோரை எட்டும் ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் கனவு தகர்ந்தது. இறுதியில் ராயல் சேலன்ஜர்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. அரவிந்த் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் தரப்பில் சாவ்லா 4 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்ரீவஸ்தவா 2 விக்கெட்டுகளையும், வல்தாட்டி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவந்த ராயல் சேலன்ஜர்ஸ் 111 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாகும். 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக இதே ராயல் சேலன்ஜர்ஸ் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மிகப்பெரிய தோல்வியாகும்.
ஆட்டநாயகன் விருது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட்டுக்கு கிடைத்தது. விருதுபெற்ற கில்கிறிஸ்ட் கூறுகையில், இந்த வெற்றி எங்களுக்கு மிக முக்கியமான நேரத்தில் கிடைத்த மிகத் தேவையான வெற்றி என்று குறிப்பிட்டார். இந்த போட்டியின் மூலம் எங்கள் புள்ளிகள் உயர்ந்ததுடன் ரன் ரேட்டும் உயர்ந்துள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு மைதானம் சாதகமாக இருந்தது என்று தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இறுதி போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.