முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்படி ஒரு தலைவரை இனி பார்க்க முடியாது: ஒபாமா

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச.8 - நெல்சன் மண்டேலா போன்ற ஒரு தலைவரை உலகம் இனி பார்க்க முடியாது என்று மண்டேலா மறைவு பற்றி இரங்கல் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. 

மண்டேலா மறைவு பற்றிய தகவல் கிடைத்ததுமே வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் தனது துயரத்தை பகிர்ந்துகொண்டார் ஒபாமா.

 

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நெல்சன் மண்டேலாவை உதாரணமாக கொண்டு ஊக்கமும் உத்வேகமும் பெற்ற லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். எனது முதல் அரசியல் நடவடிக்கையே நிறவெறி எதிர்ப்பு சார்ந்தது தான். அவரது பேச்சுகளையும் எழுத்துகளையும் பற்றி நான் ஆய்வு செய்வேன். தனது வாழ்நாளில் நெல்சன் மண்டேலா வகுத்துக்கொண்ட உதாரணத்தை புறந்தள்ளிவிட்டு எனது வாழ்வை கற்பனை செய்ய முடியவில்லை. நம்மை விட்டு அவர் பிரிந்தாலும் எல்லா காலத்திலும் அவர் நிலைத்து நிற்பார்..

 

பிறரது சுதந்திரத்துக்காக, கண்ணியத்துடன் மன உறுதியில் தளராமல் நின்று தனது தனிப்பட்ட சுதந்திரத்தை தியாகம் செய்து தென்னாப்பிரிக்காவையே மாற்றியவர். அதன் மூலம் அனைவரையும் கண்கலங்கச் செய்தவர் அவர்.

 

மக்களும் நாடுகளும் சிறப்பு நிலைக்கு செல்ல முடியும் என்பதை அவரது வாழ்வில் சிறைக் கைதியாக இருந்து அதிபர் பதவியை அடைந்த அவரது பயணம் உணர்த்தும்.

 

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜுமா

 

தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய இரங்கல் உரையில் அதிபர் ஜேகப் ஜுமா கூறியதாவது:

 

ஜனநாயக தென்னாப்பிரிக்க நாட்டின் நிறுவன அதிபர் மண்டேலா.அவர் நம்மை விட்டு அகன்று விட்டார். தமது தலைசிறந்த மகனை நாடு இழந்து விட்டது. தேசத் தந்தையை நமது மக்கள் இழந்து பிரிவுத் துயரால் வாடுகிறார்கள். என்றார் ஜுமா.

 

பான் கி மூன்:

 

உலக அரங்கில் தனி முத்திரை பதித்த தலைவர் நெல்சன் மண்டேலா. கண்ணிய மிக்கவர், தனித்துவமிக்க சாதனையாளர், நீதிக்காக சளைக்காமல் போராடியவர், அத்தகைய தலைவரின் மறை வால் வேதனை, துயருக்கு உள்ளாகியுள்ளேன் என்று இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் பான் கி மூன்.

 

ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் மண்டேலா மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளின் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திட உந்து சக்தியாக திகழ்ந்த அரியதொரு தலைவர் மண்டேலா. தமது வாழ்நாளில் அரசியல் தலைமைத்துவத்திலும் தார்மீக நெறிகளிலும் அவர் காட்டிய தனித்துவம் புகழுக்குரியது என்று 15 நாடுகள் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு கவுன்சில் தமது இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

நெல்சன் மண்டேலா பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக அறிவித்துள்ளது ஐநா பொதுச்சபை.

 

தனிநபரை கவுரவப்படுத்த இதுபோல் சர்வதேச தினம் அறிவிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்