முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவியிலிருந்து விலக தாய்லாந்து பிரதமர் மறுப்பு

புதன்கிழமை, 11 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பாங்காக், டிச.12 - தாய்லாந்து பிரதமர் பதவி விலக மறுத்துள்ளார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சரி பதவியிலுருந்து மட்டும் விலக மாட்டேன் என்று தாய்லாந்து பிரதமர் இங்லக் வர்ஷினவத்ரா அறிவித்துள்ளார். 

இதை அவர் அமைச்சரவை கூட்டத்தில் கண்ணீர் மல்க தெரிவித்தார். இவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், பாங்காக்கில் ஒரு மாதமாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. அரசு அலுவலகங்கள் முற்றுகை, போக்கு வரத்துக்கு தடை என்று அவர்கள் போரா ட்டம் நடத்தி வருவதால் நாடே ஸ்தம்பி த்துள்ளது. 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அவர் பரிந்துரைசெய்தார். இதையடுத்து 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிததுள்ளது. ஆனாலும் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வில்லை. இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. நாம் அனைவரும் ஒரே தேசத்தினர். ஒபுவரை ஒருவர் நோகடி ப்பது எந்த வகையில் நியாயம் எந்று கேட்ட அவர் கண்ணீர் விட்டு அழுதார்.  எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சரி பதவியிலுருந்து மட்டும் விலக மாட்டேன் என்று தாய்லாந்து பிரதமர் இங்லக் வர்ஷினவத்ரா அறிவித்துள்ளார்.                    

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்