முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை - 2 பேர் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      இந்தியா
Image Unavailable

ரோத்தாக், மே 20 - அரியானா மாநிலத்தில் உள்ள ரோத்தாக் நகரில் ஒரு மருத்துவமனையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அரியானா மாநிலம் ரோத்தாக் நகரில் உள்ள பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் ஒரு கொள்ளை கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பெற்றுவந்தார். எதிர் கோஷ்டியைச் சேர்ந்த சிலர் அந்த மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது இரு கோஷ்டிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு கோஷ்டியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் துப்பாக்கி குண்டுபாய்ந்து பலியானார். இந்த துப்பாக்கி சண்டையை தடுக்க முயன்ற ஆஸ்பத்திரியின் பாதுகாவலர் ஒருவரும் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். இந்த துப்பாக்கி சண்டையால் அந்த மருத்துவமனையில் பயங்கர பீதி ஏற்பட்டு, மருத்துவமனையில் இருந்த அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடினர். பிறகு போலீசார் அதிக அளவில் விரைந்துவந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்பத்திரி பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த இரு கோஷ்டிகளுக்கும் இடையே ஏற்கனவே தகராறு நடந்திருக்கிறது. அந்த தகராறின்போது படுகாயம் அடைந்த ஒருவர் இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருடன் அவரது அண்ணனும் உடன் இருந்தார். அந்த சமயத்தில்தான் எதிர்க்கோஷ்டியினர் மருத்துவமனையின் உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மருத்துவமனையில் இருந்த கோஷ்டியும் துப்பாக்கியால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்