முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்கீல் சங்கரசுப்பு மகன் மரணம்: ஐகோர்ட் புது உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 18 - சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் சங்கரசுப்பு மகன் சதீஷ் குமார் கடந்த 2011_ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் சதீஷ்குமார் செல்போனில் பதிவான தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ. புலனாய்வு குழுவுக்கு இடையூறு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ராம சுப்பிரமணியம், சிவக்குமார், நாகமுத்து ஆகியோர் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சதீஷ்குமாரின் செல்போன் பதிவுகளை சேகரிக்க மாஜிஸ்திரேட் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்