எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச. 18 - சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா முயற்சியால்
துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியினால் இந்தியாவிலே முதன்முறையாக சென்னை அரசு மருத்துவமனையில் துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிகிச்சை பிரிவை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மருத்துவத்துறையில் முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகளை அமைச்சர் பட்டயலிட்டார்.
சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதுபோன்ற ஒரு பிரிவு எந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்படவில்லை.
துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு அரசு மருத்துவமனையில் அமைத்த மாநில தமிழகம் தான். மத்திய அரசு நடத்தும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த பிரிவு உள்ளது. அதற்கு அடுத்த இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அரசு மருத்துவமனையில் இந்த பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை திறந்து வைத்து பேசினார். அப்போது மருத்துவத்துறையில் ஜெயலலிதா ஏற்படுத்திய புதிய சாதனைகள், திட்டங்களை பெருமிதத்துடன் எடுத்து கூறினார்.
இவ்விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:_
சென்னை மாநகரம் இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக மாற்ற முதல்வர் ஜெயலலிதா முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறார். மருத்துவத் துறையை மகத்தான துறையாக உருவாக்கி இருக்கிறார். மருத்துவ பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் ஜெயலிலதா பேசியபோது, புதிய பெல்லோஷிப் படிப்பு அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி இன்று (நேற்று) இந்த புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக்க முதல்வர் ஜெயலலிதா உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறார்.
இன்று இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத அளவுக்கு இந்த பிரிவு முதன்முதலாக இங்கு துவக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு உயர்ந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம். இன்று இந்த புதிய பிரிவு துவக்கப்பட்டதன் மூலம் ஏழை மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்கும். முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 240 பேர் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். இதன் மூலம் 418 கோடி ரூபாயை அரசு மருத்துவமனைகள் ஈட்டியுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை, சென்னையில் இந்த அரசு மருத்துவமனை மட்டும் 67 கோடியே 43 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது. இதில் 55 கோடி ரூபாய் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இந்த ஆண்டு 6511 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார். கிராமப்புறங்களிலும் நல்ல சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகளை முதல்வர் செய்துள்ளார். அங்கும் உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். குழந்தை பராமரிப்பு, அவசர சிகிச்சை, 24 மணி நேர பிரசவ வார்டு என அனைத்து வசதியும் செய்து கொடுத்திருப்பதால் இன்று மருத்துவத் துறை வேகமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், திட்டத்தின் மூலம் இன்று குழந்தைகள் இறப்பு விகிதம் 1000_க்கு 21 என்ற அளவில் குறைந்துள்ளது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறக்கும் நிலை 1 லட்சத்துக்கு 73 என்ற அளவில் குறைந்துள்ளது. இதுபோன்ற மருத்துவத்துறையில் முதல்வர் ஜெயலலிதா செய்து சாதனைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
இவ்விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், பொது அறுவை சிகிச்சைத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ்.தெய்வநாயகம் ஆகியோர் பேசினர். விழாவிற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை தலைமை தாங்கினார்.
துளைவழி அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற இணை பேராசிரியர் டாக்டர் பு.பாலாஜி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.