எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,டிச.18 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் சென்னையில் நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்தும் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தலும் வரவிருக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்தே போட்டியிடும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு திருமண விழாவில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார். அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்களும் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைத்து முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்குவோம் என்று கூறி வருகிறார்கள். ஆக அ.தி.மு.க. தனித்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த தி.மு.க. பொதுக்குழுக்கூட்டத்தில் கூட்டணி பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கட்சி தலைவர் கருணாநிதி, காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதுமட்டுமன்றி காங்கிரஸ் துரோகம் செய்த கட்சி, நன்றி கெட்ட கட்சி என்றெல்லாம் கருணாநிதி வசைபாடியுள்ளார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதாவுடனும் கூட்டணி இல்லை என்று கருணாநிதி தெரிவித்தாலும் அக்கட்சியுடன் கூட்டுசேர தி.மு.க. விரும்புவதாகவே கூறப்படுகிறது. காரணம், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களை பாரதிய ஜனதா கைப்பற்றி உள்ளது. அதனால்தானோ என்னவோ, பா.ஜ.க.வுடன் கருணாநிதி கூட்டு சேரலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. தே.மு.தி.க.வை பொருத்தவரையில் சமீபத்தில் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அக்கட்சி தலைவர் விஜயகாந்த், தனது தலைமையை ஏற்க விரும்பும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று தனது நிலையை தெரிவித்துவிட்டார். ஆனால் இவரது தலைமையை யார் ஏற்பார்கள் என்பதுதான் புரியவில்லை. எனவே தே.மு.தி.க.வும் தனித்தே போட்டியிடலாம் அல்லது காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடலாம். இப்படி ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி கணக்கு போட்டுக்கொண்டியிருக்கும் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் சென்னையில் நாளை கூடவிருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்த விபரம் வருமாறு:_
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் 19_ம் தேதி (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மசூதனன் தலைமையில் நடைபெறும். எனவே அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியிருந்தார். அதன்படி நாளை சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த செயற்குழு வழங்கும் என்று தெரிகிறது. மேலும் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடையும் வகையில் சில முக்கிய அறிவுப்புகளையும் ஜெயலலிதா வெளியிடுவார் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில் இந்த செயற்குழுக்கூடுவதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.