முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 மந்திரிகள் மீது ஆந்திர முதலமைச்சர் புகார்

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      அரசியல்
Image Unavailable

ஐதராபாத்,மே.20 - அரசு ரகசியங்களை ஜெகன்மோகன் ரெட்டிக்கு உளவு சொல்வதாக 2 மந்திரிகள் மீது ஆந்திர முதலமைச்சர் புகார் காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார் கூறியுள்ளார். 

ஆந்திராவில் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி விஸ்வரூபம் எடுத்து வருகிறார். எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு கடப்பா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசின் தோல்வி குறித்து ஆராய மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் ஐதராபாத் வந்தார். அவரை முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி தனது மந்திரி சபையில் உள்ள 2 அமைச்சர்கள் அரசு ரகசியங்களை உளவு சொல்வதாக புகார் கூறியுள்ளார். ஆனால் அந்த மந்திரிகளின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. அவர்கள் கடலோர ஆந்திராவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் பதவியேற்றதில் இருந்தே அதிருப்தியில் இருந்து வந்தனர். இலாக்கா ஒதுக்கீட்டில் திருப்தி இல்லை என்று போர்க்கொடி உயர்த்தினார்கள். அவர்கள் 2 பேரையும் மந்திரி சபையில் இருந்து நீக்க அனுமதிக்க வேண்டும் என்று குலாம்நபி ஆசாத்திடம் கிரண்குமார் ரெட்டி கூறினார். இது பற்றி கட்சி தலைவர் சோனியாவிடம் பேசி முடிவெடுப்பதாக குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். கடந்த 16 ம் தேதி நடைபெற்ற ஆந்திர மந்திரி சபை கூட்டத்திற்கு 2 மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டியின் உதவியாளர் ஒருவர் கூறும் போது, 2 அமைச்சர்களும் நீண்ட நாட்களாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு உளவு சொல்லி வந்துள்ளனர். மந்திரி சபையில் நடக்கும் விஷயங்கள் உடனுக்குடன் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். எனவேதான் மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்க இரு அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார். ஆந்திர மந்திரிகளில் 4 பேர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர்களானதால் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். எனவே அவர்களையும் மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என  முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி குலாம்நபி ஆசாத்திடம் முறையிட்டார். இதற்கிடையே முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டிக்கு எதிராக மந்திரிகளும் எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி உயர்த்தினார்கள். முதலமைச்சரின் செயல்பாடுகள் சரியில்லை என புகார் கூறியிருந்தனர். எனவேதான் இதற்கு பதில் நடவடிக்கையாக அமைச்சர்கள் மீது கிரண்குமார் ரெட்டி புகார் கூறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மேலிடம் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கிரண்குமார் ரெட்டி நம்பிக்கையுடன் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago