முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 போட்டியிலும் வென்றது பெருமை அளிக்கிறது - தோனி

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே. 20 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 7 போட்டியிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு -  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடந்த 64 - 

வது லீக் ஆட்டத்தில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தியது.  

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. ரித்திமான் சகா 33 பந்தில் 49 ரன்னும்,(7 பவுண்டரி, 3சிக்சர்), மைக் ஹஸ்சே 32 ரன்னும் எடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து விளையாடிய கொச்சி அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்னே எடுக்க முடிந்தது. ஹாட்கே 42 பந்தில் 51 ரன்

னும், (3 பவுண்டரி, 2 சிக்சர்), மெக்குல்லம் 33 ரன்னும் எடுத்தனர். அஸ்வின், பொலிஞ்சர், ஜகாதி, பிராவோ தலா 1 விக்கெட் எடுத்தனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். 18 புள்ளி ளை பெற்று அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து பெற்ற 7 -வது வெற்றி இதுவாகும். 

ஏற்கனவே, கொல்கத்தா, பெங்களூர், புனே, டெக்கான், ராஜஸ்தா

ன், டெல்லி அணிகளை இங்கு வென்று இருந்தது. கொச்சி அணி 8 - வது தோல்வியை தழுவி உள்ளது. 

இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறிய

தாவது - சோப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 7ஆட்டத்திலும் வெ

ற்றி பெற்று சாதன படைத்துள்ளோம். இது உண்மையிலேயே பெரு

மை அளிக்கிறது. இது மிகப் பெரிய சாதனையாகும். 

இந்த ஆட்டங்கள் அனைத்திலும் நாங்கள் எளிதாக வெற்றி பெற்றதாக கருத வேண்டாம். சில ஆட்டங்களில் கடுமையாக போராடித்தான் வென்றோம். அடுத்த சுற்றில் மிகப் பெரிய ஆட்டத்துக்கு நாங்கள் தயா

ராகி விட்டோம்.

எங்களது பந்து வீச்சும், பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. சுழற் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. ஆட்ட நாயகன் விருது பெற்ற ரித்திமான் சகா கூறியதாவது - 

எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். எந்தவித நெருக்கடியும், பதட்டமும் இல்லாமல் நான் விளையாடினேன் என்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளம் வீரரான அவர் கூறினார். 

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த கொச்சி டஸ்கர்ஸ் அணிக் 

கேப்டன் பார்திவ் படேல் கூறியதாவது - சேவாக், தோனி போன்ற அதிரடியான வீரர் என்று நான் என்னை சொல்லவில்லை. 

எனது முழுத் திறமையை வெளிப்படுத்தினேன். 152 ரன் என்பது எளி

தான இலக்கு தான். 15 ஓவருக்குப் பிறகும், எங்களது ஆட்டத்தில் அதி

ரடி இல்லை. இதனால் நாங்கள் தோற்றோம். 

சென்னை சூப்பர் கிங்சை 152 ரன்னுக்குள் கட்டுப் படுத்தி விட்டோம். எங்களது அணி சார்பில் ஆர். பி. சிங் அபாரமாக பந்து வீசினார். இவ் வாறு படேல் தெரிவித்தார். 

கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது. இந்தப் போட்டி வரும் 24 -ம் தேதி நடக்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்