முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அச்சுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.19 - செய்தி மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர். கே.டி.ராஜேந்திரபாலாஜி  தலைமையில் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்  இன்று (18.12.2013) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எழுது பொருள் அச்சுத் துறை குறித்த மானிய கோரிக்கைகளின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்த பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.   இக்கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பணிகளை விரைவு படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.  

மேலும்    அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆராயப்பட்டன.  மேலும் அச்சகங்களின்  கட்டிடப் பாதுகாப்பு  இயந்திரங்களின் பாதுகாப்பு, மற்றும்  பணிபுரியும்  பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது பணித் திறனை மேம்படுத்துவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது மற்றும்  துறையின் இதர பணிகளின் குறித்து  இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  

இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை  செயலாளர் முனைவர் மூ. ராஜாராம்,, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் இயக்குநர் .ஜெ.ஜெயகாந்தன், மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்