எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.20 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில்
2013_14ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் கூட்டுறவுச் சங்கங்களில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.10.42 கோடி நிதியுதவி
* 1.4.2011 முதல் 14.12.2013 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.10,589.35 கோடி அளவி.ற்கு பயிர்க்கடன்கள்
* மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் 3.77 கோடி கடனுதவி.
* 1.4.2011 முதல் 30.112013 வரை ரூ.14,000 கோடி வைப்புத் தொகை சேகரிப்பு
* கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகை ரூ.5690 கோடி சேகரிப்பு.
* கூட்டுறவுச் சங்கங்களில் வேளாண் விளைபொருள்கள் ரூ.367 கோடி விற்பனை ஆகியவை முடிவு செய்யப்பட்டன.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் 18.12.2013 அன்று, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், கூட்டுறவு விற்பனை இணையங்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், " முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சரால் 2013_14_ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது 100 கூட்டுறவுச் சங்கங்களில் பல்வேறு வகையான திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.10.42 கோடி, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இரும்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கு 42 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரூ.1,93,95,481/_ம், 20 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு ரூ.1,20,20,712/_ம், கணினி எடை மேடை அமைக்க 3 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு ரூ.56,66,376/_ம், சரிய சக்தி கொப்பரை உலர்கலன் நிறுவ 3 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரூ.17,67,000/_ம், 7 மத்திய கூட்டுறவு அச்சங்கங்களுக்கு நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.3,68,23,290/_ம், 6 தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகளுக்கு, அலுவலகக் கட்டடம் மற்றும் சில்லரை விற்பனை வளாகம் கட்டுவதற்கு ரூ.1,13,90,000/_ம் ஆக மொத்தம் 81 கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ.8,70,62,859/_க்கான நிதியுதவி அமைச்சரால் வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள 19 கூட்டுறவுச் சங்கங்களில் 4 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாகைளுக்கு, சுயசேவைப் பிரிவு நவீனமயமாக்க ரூ.79,40,000/_ம், இரும்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்ட 8 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரூ.38,99,102/_ம், 5 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு ரூ.25,32,000/_ம், 2 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளுக்கு நகரும் நியாயவிலைக் கடைகளாக செயல்படுவதற்கு வாகனம் வாங்க ரூ.27,40,000/_ம் ஆக மொத்தம் 19 பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ.1,71,11,102/_க்கான நிதியுதவி ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது என்பதை அமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, தற்போது வடகிழக்குப் பருவமழை திருப்திகரமாக உள்ளதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக பயிர்க் கடன்கள் எளிதாக வழங்கவும், உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்களை உடனுக்குடன் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், விவசாயிகளுக்குத் தேவையான இதர கடனுதவிகளை தாமதமின்றி முன்னுரிமை கொடுத்து வழங்கவும், இதில் எவ்விதப் புகாருக்கும் இடமின்றி செயல்படுமாறும் அறிவுறுத்தினார்.
இதற்காகத்தான் மாநிலம் முழுவதும் டிஏபி உரம், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான அளவில் உரிய நேரத்தில் கிடைக்க தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு வழங்கும் வட்டியில்லாக் கடன் ரூ.135.50 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110_ன் கீழ் அறிவித்த அறிவிப்பிற்கிணங்க முதற்கட்டமாக 72 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வாழ்திறனை அதிகரிக்க ஒவ்வொரு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் தலா ரூ.50 இலட்சம் வீதம் ரூ.36 கோடி சிறப்பு காசுக் கடன் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இச்சங்கங்களின் வியாபாரத் தன்மையை ரூ.2 கோடிக்கு மேல் உயர்த்த அமைச்சர், அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.
1.4.2006 முதல் 31.3.2011 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்கள் ரூ.9,163.60 கோடியாகும், 1.4.2011 முதல் 14.12.2013 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன்கள் ரூ.10,589.35 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பேசுகையில், ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு வணிகக் கடன்கள் வழங்குவதற்கு நடப்பாண்டில் ரூ.55 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் 30.11.2013 வரை 35,542 நபர்களுக்கு ரூ.33.23 கோடி அளவிற்கு இக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
1.4.2013 முதல் 31.3.2013 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலமாக ரூ.92,556 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
1.4.2011 அன்று அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் இருந்த வைப்புத் தொகை ரூ.26,245 கோடியாகும். ஆனால், 30.11.2013ம் தேதிப்படி கூட்டுறவு நிறுவனங்களிலுள்ள வைப்புத் தொகை ரூ.40,245 கோடியாகும். அதாவது 1.4.2011 முதல் 30.112013 வரை ரூ.14,000 கோடி வைப்புத் தொகை உயர்ந்துள்ளது. இது கூட்டுறவு வங்கிகள் மீது பொதுமக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்று என அமைச்சர் பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார்.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு அடைய நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பாண்டில் ரூ.6.00 கோடி அளவிற்கு கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு 30.11.2013 வரை 1,027 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3.77 கோடி அளவிற்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. குறியீட்டினை எய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனுக்குடன் கடனுதவிகளை வழங்க அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.
தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் உறுப்பினர்களுக்கு நகைக்கடன் வழங்க நடப்பாண்டில் ரூ.1,000 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் 2013 நவம்பர் வரை 1,62,927 பயனாளிகளுக்கு ரூ.588.98 கோடி அளவில் நகைக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நகரக் கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு வகையான கடன்களை வழங்கிட நடப்பாண்டில் ரூ.7,251 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் 30.11.2013 வரை ரூ.3,732.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டு 9,83,567 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
அமைச்சர் 50 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டித்தரப்படும் என சட்டமன்றப் பேரவையில் அறிவித்த அறிவிப்பின்படி 26 மண்டலங்களிலிருந்து வரப்பெற்ற முன்மொழிவுகள் அடிப்படையில் 50 சங்கங்களுக்கு பாதுகாப்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இப்பணியினை நடப்பாண்டிற்குள் விரைந்து முடிக்க அமைச்சர் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியானது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுடன் உடனுக்குடன் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவாக மின்னணு வங்கியியல் சேவை 4,527 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளிலும் நடப்பாண்டில் செயல்பட்டு வருகிறது .
கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகளில் 2000 மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு பங்கு மூலதன நிதியுதவியை மானியமாக வழங்க அறிவித்ததையொட்டி, 30.11.2013 வரை 617 பயனாளிகளுக்கு ரூ.227.43 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபோலவே, மகளிர் உறுப்பினர்களுக்கு தலா ரூ. 2,500 வீதம் பங்கு மூலதன மானியமாக 525 பயனாளிகளுக்கு ரூ.198.53 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
நகரக் கூட்டுறவு வங்கிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உறுப்பினர்களுக்கு பங்கு மூலதன மானியமாக ரூ.2,500 வீதம் 312 நபர்களுக்கு ரூ.70.92 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் விளைபொருள்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் மூலம் விற்பனை செய்வதற்கு நடப்பாண்டில் ரூ.780 கோடி குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு 30.11.2013 வரை ரூ.367 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 112 வேளாண் விற்பனைச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தானிய ஈட்டுக் கடன் வழங்க நடப்பாண்டில் ரூ.98 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் 10,207 பயனாளிகளுக்கு ரூ.43 கோடி அளவிற்கு தானிய ஈட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வியாபாரம் முன்னேற்றம் அடைய வேண்டி நடப்பு ஆண்டில் ரூ.130 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் 30.11.2013 வரை ரூ.72 கோடி அளவிற்கு வியாபாரம் ஈட்டியுள்ளது. மலைவாழ் மக்களால் விளைவிக்கப்படும் சாமை, வரகு மற்றும் சேகரிக்கப்படும் தேன், புளி ஆகிய பொருள்கள் பதப்படுத்தாமலேயே இடைத்தரகர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால், அவர்களின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெறாத நிலை இருந்தது. இந்நிலையை மாற்றும் பொருட்டு முதல்வர் ஜெயலலிதா மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து பொது வணிக முத்திரையிட்டு விற்பனை செய்வதற்கு வழிவகுத்துள்ளார்கள். இத்திட்டத்தினால் மலைவாழ் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு உரிய விலையினை உடனுக்குடன் பெற்றிட முடிகிறது. நுகர்வோருக்கும் நியாயமான விலையில் தரமான பொருள்கள் கிடைக்கப் பெறுகின்றன.
மலைவாழ் மக்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்திட பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 10 வாகனங்கள் வழங்கி, நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகள் அவர்கள் விளைவித்த விளைபொருள்களுக்கு ஆதாய விலை கிடைக்கும் வகையில் பொருள்களை பாதுகாப்பாக வைக்கவும், அதன் மீது தானிய <ட்டுக் கடன் வழங்கவும் 2,87,700 மெட்ரிக் டன் கொள்திறன் கொண்ட 2,273 கிடங்குகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதாவால் ரூ.235.86 கோடி மானியம் வழங்க திட்டமிட்டு, இதில் 1,403 கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டுள்ளது . மேலும், 691 கிடங்குகள் விரைவில் திறக்கப்பட உள்ளன என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பெருமையுடன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களிலுள்ள கிடங்குகள், சேமிப்பு கிடங்கு வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தரச் சான்று (ஹஉஉசநனயைவ+டி&) பெற்று அதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பல்வேறு சலுகைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.
பொதுவிநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட்டுறவுச் சங்கங்களும், கூட்டுறவு நிறுவனங்களும் பெரும் பங்காற்றி வருகின்றன. அத்தியாவசியப் பொருள்களை பதுக்கி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறப்பு பொதுவிநியோகத் திட்ட பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
வெளிச்சந்தை விலையினைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் போன்ற மளிகைப் பொருள்கள் மிகக் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அவர்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தும் சேரும் வகையில் சீரிய முறையில் செயல்படுத்தி அனைவரும் பயன்பெற முழு <டுபாட்டுடன் செயல்படுவதோடு, முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி கூட்டுறவுத்துறை அனைத்து செயல்பாட்டிலும் முதலிடம் வகிக்கத் தக்க வகையில் திட்டங்கள் வகுத்து திறம்பட செயலாற்றிட அமைச்சர் துறை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளர் எம்.பி.நிர்மலா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பெ.சீத்தாராமன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் அ.அமுதா அருணாச்சலம், கூடுதல் பதிவாளர்கள் க.இராஜேந்திரன், இரா.கார்த்திகேயன், ம.ப.சிவன் அருள், இராம ஜெயம்பாண்டியன், கா.பிரமிளா மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.