எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.20 - நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களிலும், அ.தி.மு.க. மட்டும் 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா 3 வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தலில் 12 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
2006 ல் மைனாரிட்டியாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பதவியேற்றது முதல் தமிழக நலனில், மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனது குடும்ப நலனிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வாங்குவதையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தார். கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் தி.மு.க.வினர் அராஜகங்களை அரங்கேற்றினர். இது தவிர, அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்தன. ஏழை, எளிய நடுத்தர மக்கள் ஒருவேளைக்கு கூட நல்ல சாப்பாடு சாப்பிடுவது கஷ்டமாகி விட்டது.
இத்துடன் தினம் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் துன்பம் அடைந்து வந்தனர். பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தொழில்களும் பாதிப்படைந்தன. சிறு, குறு தொழில் அதிபர்கள் பெரும் நஷ்டமடைந்தனர்.
அனைத்து பகுதியிலும் தி.மு.க.வினரின் ஊழல் பன்மடங்கு அதிகரித்தது.கட்டப் பஞ்சாயத்து அடிதடி அராஜகங்களும் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தலைவிரித்தாடின. எங்கும் ஊழல், எதிலும் ஊழல், ஊழல் இல்லாத இடமோ, துறையோ இல்லாத அளவிற்கு ஊழல் மிகவும் மலிந்து விட்டது. இது தவிர மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ஏழை, எளியவர்களிடம் நிலங்களை அபகரித்தல், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தி.மு.க.வினரின் காண்டிராக்ட் ஊழல், எடுத்த பணிகளை தரமற்றதாக செய்து கொள்ளை. தி.மு.க.வின் ஊழலுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஸ்பெக்ட்ரம் ஊழலும், சினிமாத் துறையில் கருணாநிதியின் குடும்பத்தினரின் அட்டூழியமும், கேபிள் கொள்ளை ஆகியவற்றால் தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.
இது தவிர பெண்கள் தனியாக ரோட்டில் நடமாட முடியவில்லை. வழிப்பறி திருடர்களின் அராஜகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பூட்டிய வீடுகளில் உடைத்து கொள்ளை, நகைக் கடைகளை உடைத்து கொள்ளை, வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள், முதியோர்கள் கொலை செய்யப்பட்டு நகை, பணம், பொருட்கள் கொள்ளை ஆகியன தினம் நடந்து வந்தது. தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்ற அளவிற்கு அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தி.மு.க.வை தோற்கடிக்கவும் முடிவு செய்திருந்தனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த தேர்தலை போன்றே பல இலவசங்களை தேர்தல் அறிக்கையாக கருணாநிதி வெளியிட்டார். பல்வேறு பிரச்சினைகளுக்கு பின்பு காங்கிரசுக்கு 63 இடங்களை கொடுத்து பா.ம.க. விடுதலை சிறுத்தைகளுக்கும் கணிசமான இடங்களை கொடுத்து பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. இலவச கேஸ் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதாலும், தேர்தல் அறிக்கையாலும் கூட்டணி கட்சிகளின் பலத்தாலும் தேர்தலில் மக்கள் தனக்கு ஓட்டளிப்பார்கள், வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தில் விட்டு வைத்த இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும், தமிழக மக்களின் உழைப்பை சுரண்டவும் கருணாநிதி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் தி.மு.க வுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் இருந்தனர் என்பதை கருணாநிதியால் கணிக்க இயலவில்லை. அரசியலில் சாணக்கியர் என்று அவரது கட்சியினரால் கூறப்படும் கருணாநிதியால் 2011 ல் தமிழக மக்களின் மன நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி தி.மு.க.கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்தனர். தி.மு.கவின் செல்லப் பிள்ளைகள் என அழைக்கப்பட்ட அரசு ஊழியர்களும் தி.மு.க.வினரால் பாதிக்கப்பட்டதால் அவர்களும் தி.மு.க.வை எதிர்க்க முடிவு செய்தனர்.
ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல், புதிய இளம் வாக்காளர்களை பாதித்ததால் அவர்களும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க தயாராகினர். இவற்றை எல்லாம் அறியாத கருணாநிதி தி.மு.க. கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று
மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வந்தார். தேர்தல் முடிந்த பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சி தலைவர்கள் தினம் ஒருவராக கருணாநிதியை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அறிக்கை வெளியிட்டு கருணாநிதிக்கு மன ஆறுதலை ஏற்படுத்தி வந்தனர்.
தேர்தல் நாளன்று மக்கள் மாபெரும் மவுன புரட்சியை ஏற்படுத்தினர்.ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கப்பட்டாலும் காலை 7 மணிக்கே பூத்களில் மக்கள் வரிசைகளில் நிற்க தொடங்கினர். காலையில் வரத் தொடங்கிய மக்கள் மாலை வரை சாரைசாரையாக கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக ஓட்டளித்து சென்றனர். இது வரை ஓட்டளிக்க வெளியில் வராத மேல்தட்டு மக்களும் இந்த தேர்தலில் காலை 7 மணிக்கெல்லாம் ஓட்டு சாவடிக்கு வந்தது ஆச்சர்யமாக இருந்தது. மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்த நிலையிலும் பூத்துக்கு 50 முதல் 300 பேர் வரை ஓட்டளிக்க வரிசையில் நின்றனர். அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு சில பூத்துகளில் இரவு 9 மணி வரை மக்கள் ஓட்டளித்தனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்த தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரித்தது. ஏற்கனவே ஆட்சிக் கட்டில் தனக்கே என பகல் கனவில் இருந்த கருணாநிதியும், அவரது சகாக்களும், ஓட்டு சதவீதம் அதிகரித்த போதெல்லாம் தி.மு.கவே ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் இந்த முறையும் தி.மு.க. ஆட்சியை பிடிப்பது உறுதி என புளகாகிதம் அடைந்து இருந்தனர். மே 13 அன்று ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டன. அதில் மக்களின் மவுன புரட்சி அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. அ.தி.முக. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
12 மாவட்டங்களில் தி.மு.க. 0:
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக வென்ற 12 மாவட்டங்கள் விபரம்:
மதுரை(10), திருவள்ளூர்(10), காஞ்சிபுரம்(11), தருமபுரி(5), சேலம்(11), நாமக்கல்(6), ஈரோடு(8), திருப்பூர்(8), கோவை(10), கடலூர்(9), நாகப்பட்டினம்(6), புதுக்கோட்டை(6). ஆகிய இடங்களில் அ.தி.மு.க கூட்டணி ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது. இந்த 12 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியடைந்தது.
14 மாவட்டங்களில் தி.மு.க தலா 1:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி 7, தி.மு.க. கூட்டணி 1
விழுப்புரத்தில் அ.தி.மு.க. கூட்டணி 10, தி.மு.க கூட்டணி 1
நீலகிரியில் அ.தி.மு.க. கூட்டணி 2, தி.மு.க.கூட்டணி 1
திருச்சியில் அ.தி.மு.க. கூட்டணி 8, தி.மு.க. கூட்டணி 1
பெரம்பலூரில் அ.தி.மு.க. தி.மு.க. கூட்டணி தலா 1
அரியலூரில் அ.தி.மு.க, தி.மு.க. கூட்டணி தலா 1
தஞ்சாவூரில் அ.தி.மு.க, கூட்டணி 7, தி.மு.க.கூட்டணி 1
தேனியில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1
சிவகங்கையில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1
விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி 6, தி.மு.க. கூட்டணி 1
தூத்துக்குடியில் அ.தி.மு.க. கூட்டணி 5, தி.மு.க. கூட்டணி 1
திருநெல்வேலியில் அ.தி.மு.க. கூட்டணி 9, தி.மு.க. கூட்டணி 1
இடத்திலும் வெற்றி பெற்றன. இந்த 14 மாவட்டங்களிலும் தி.மு.க. கூட்டணிக்கு தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
4 மாவட்டத்தில் தி.மு.க. தலா 2. :
சென்னையில் அ.தி.மு.க. கூட்டணி 14, தி.மு.க. கூட்டணி 2
வேலூரில் அ.தி.மு.க. கூட்டணி 11, தி.மு.க. கூட்டணி 2
திருவாரூரில் அ.தி.மு.க, தி.மு.க. கூட்டணி தலா 2
கன்னியாகுமரியில் அ.தி.மு.க. கூட்டணி 4, தி.மு.க. கூட்டணி 2
இந்த 4 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் தி.மு.க கூட்டணி 3 இடங்களில் வெற்றி பெற முடிந்தது.
நடந்து முடிந்த 14 வது சட்டசபை தேர்தலில் 12 மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணி முழுமையாகவும், மீதமுள்ள 32 மாவட்டங்களில் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க கூட்டணியே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.