எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.21 - 'அம்மா திட்டம்' திட்டத்தின் மூலம் மாநிலம் முழுதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில், 18.41 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா கூறியுள்ளார்.
மேலும், வருவாய்த் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும், உரிய நேரத்தில், அது உரிய மக்களைச் சென்றடைந்திட அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்ற,வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணாஅதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_
அனைத்துத் துறைகளுக்கும் தாய்த் துறையாகவும், அரசாங்கத்தின் முதுகெலும்பாகவும், ஏழை எளிய மக்களின் துயர்களைக் களைந்து, அவர்களை ஏற்றிவிடும் ஏணியாகவும் விளங்கிடும் துறை வருவாய்த்துறையாகும்'. முதலமைச்சர் வருவாய்த்துறையைப் பற்றி மிகுந்த பெருமையோடு சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.
வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் செயல் பாடுகள் குறித்து, வருவாய்த்துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வருவாய்த்துறை அமைச்சர். பி.வி.ரமணா தலைமையில், வருவாய்த்துறையின் செயலர் மற்றும் துறைத்தலைவர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தலைமைச்செயலகம் திட்டக்குழு கருத்தரங்க கூடத்தில் நேற்று (20.12.2013) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் செயலர் ககன் தீப் சிங் பேடி, வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் தி. ஸ்ரீ. ஸ்ரீதர்,நிலஅளவை . ரமேஷ் ராம் மிஷ்ரா, நில நிருவாக ஆணையர் முனைவர் திருமதி. கிரிஜா வைத்தியநாதன் ,நிலச் சீர்திருத்த ஆணையர் திருமதி ஜெயஸ்ரீ ரகுநந்தன் ., நகர்புற நிலவரி மற்றும் நகர்புற நிலவரித்திட்ட இயக்குநர் பி. அண்ணாமலை, பேரிடர் மேலாண்மை கூடுதல் ஆணையர் ஆஷிழ சாட்டர்ஜி, மற்றும் வருவாய் நிருவாக இணை ஆணையர் முனைவர் மு.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களான, முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டு பொது மக்களிடம் மிகுந்த நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ள 'அம்மா' திட்டம், புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்குதல், வருவாய்த்துறையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான, தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகங்கள் (மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்), வருவாய் கோட்ட, வட்டங்களுக்கான புதிய கட்டடங்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிருவாக அலுவலர்களுக்கான அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், பணிகளை விரைந்து மேற்கொள்ள புதிய வாகனங்கள், கணினி மற்றும் மடிக்கணினிகள், விரைவு பட்டா மாறுதல் திட்டம் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிடும் திட்டம், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள், பள்ளி மாணவ மாணவியர்களுக்குத் தேவையான அனைத்து வகையான சான்றிதழ்களையும் தாம் பயிலும் பள்ளிகளிலேயே பெற்றிடும் உன்னதத் திட்டம், பெண்களை பெரிதும் கவர்ந்துள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கிடும் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நிவாரண உதவித் தொகை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டம், வருவாய்த்துறை ஆவனங்களை கணினி மயமாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.
இறுதியாக அமைச்சர் அவர்கள் தமது உரையில், முதலமைச்சர் ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்கிற உயரிய நோக்கமதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு, நல்ல பல திட்டங்களை நாளும் தந்த வண்ணமுள்ளார்கள். குறிப்பாக, வருவாய்த் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும், உரிய நேரத்தில், அது உரிய மக்களைச் சென்றடைந்திட நாம் அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்றி, நமது துறைக்கும், முதலமைச்சர் அவர்கட்கும் பெருமையினைத் தேடி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் வருவாய்த்துறையின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு, மிகவும் குறுகிய காலத்தில் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள திட்டம் 'அம்மா திட்டம்' ஆகும். இத்திட்டத்தின் மூலம் நாளதுவரையில், மாநிலம் முழுதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏறத்தாழ 12,666 முகாம்கள் நடத்தப்பட்டு, பெறப்பட்ட 33.13 இலட்சம் மனுக்களில்,18.41 இலட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 26,651 மனுக்கள் பிறதுறையின் நடவடிக்கைக்காக அனுப்பட்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் வரலாற்றில் இது ஒரு மகத்தான சாதனை என்றால் அது மிகையில்லை. அம்மா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி, மாவட்ட வாரியாக புள்ளி விவரங்களை உள்ளடக்கிய கையேட்டினை வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா வெளியிட்டார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.