முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தாருக்கு முதல்வர் நிதி

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_

தருமபுரி மாவட்டம், மூக்கனூர் தரப்பு, மூக்கனூர் _ கிருஷ்ணாபுரம் சாலையில் 27.11.2013 அன்று  பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த  கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரின் மகன் முனுசாமி; 

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம் கிராமம், கிழக்கு கடற்கரை சாலை அருகே 28.11.2013 அன்று வேனில் பயணம் செய்த திண்டிவனம் வட்டம், கீழ்புத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அரிகிருழணன் என்பவரின் மகன்  வேலாயுதம், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த  திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம் மதுரா வெண்புருஷம் கிராமத்தைச் சேர்ந்த  நாராயணன் என்பவரின் மகன் சிவக்குமார்; 

சென்னை, வில்லிவாக்கம், ஆ.கூ.ழ. சாலையில் 28.11.2013 அன்று இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ராஜமங்களம் பகுதியைச் சேர்ந்த  சரவணன்; 

சென்னை,  அடையாறு அருகே  28.11.2013 அன்று  சாலையில் சென்று கொண்டிருந்த  வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திரு. ரவிக்குமார் என்பவரின் மனைவி தயாநிதி; 

__ ஆகியோர் அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வட்டம், கோ.பூவனூர் கிராமம், உளுந்தூர்பேட்டை _ விருதாச்சலம் சாலையில் 25.11.2013 அன்று காவல் வாகனம்  மோதியதில் சதீஷ்குமார் என்பவரின் மகள் சிறுமி  ஹர்ஷினி உயிரிழந்தாள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

இந்த துயர சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த  சாலை விபத்துகளில்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்