முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நீக்கம்: முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் குந்தா ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கலைச்செல்வன், மற்றும் புத்திச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று முதல் அவர்கள் அப்பதிவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.க.லைச்செல்வன் (இவர் ஏற்கனவே வகித்து வரும் மாவட்ட கழகச்செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்).

குந்தா ஒன்றியக்கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் புத்திச்சந்திரன் எம்.எல்.ஏ. (இவர் ஏற்கனவே வகித்து வரும் மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்). இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு பதிலாக நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் கே.பி.ஹேம்சந்த் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்),

குந்தா ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் என்.மோகன் (ஒன்றியக்கழக துணைச் செயலாளர், உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர்) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு  கழக உடன்பிறப்புக்கள் முழு ஒத்துழைப்பு நல்லிகிடக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்