முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லயோலா கல்லூரிக்கு சீமான் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.23 - சென்னையில் லயோலா கல்லூரி விழாவிற்கு பங்கேற்ற குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை கண்டித்து கல்லூரியின் நிர்வாகம் மீது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து  அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:_

தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் லயோலா கல்லூரியின் விழாவுக்கு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் இன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டிருப்பது தமிழர்களின் மனதை வேதனையுற செய்துள்ளது. 

2009_ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுத்திருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பான வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் தமிழர்களைக் காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அவர், "இலங்கை இராணுவம் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெற்றிச் செய்தி வரும்'' என இலங்கையின் அமைச்சரைப் போல நாடாளுமன்றத்திலேயே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனார். பல்லாயிரக்கணக்கில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது "போரை நிறுத்துவது என் வேலை இல்லை'' என்று கைவிரித்தவர் அவர்.

இலங்கையில் நடந்திருப்பது இனப்படுகொலையே என நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் உட்பட பல பன்னாட்டு ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ள நிலையில், "இந்தியாவின் போரையே நாங்கள் நடத்தினோம். இந்தியாவின் முழு ஒத்துழைப்புடனேயே எங்களுக்கு வெற்றிக் கிட்டியது'' என்று இன்று இலங்கையின் அதிபர் மகிந்த இராஜபக்சேயும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய இராஜபக்சேயும் வெளிப்படையாகப் பேசி வரும் நிலையில், பிரணாப் முகர்ஜி உட்பட 2009_ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த அனைவருமே இனப்படுகொலைக் குற்றத்திற்கு துணை போனவர்களாக நிற்கின்றனர்.

இச்சூழலில் பிரணாப் முகர்ஜியை லயோலா கல்லூரி தனது விழாவிற்கு அழைத்திருப்பது தமிழர்களின் வேதனைப் புண்ணைக் கீறிப் பார்க்கும் செயலாகும்.

இதனை ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பி, கோரிக்கை விடுத்த மாணவர் தலைவர் ஜோ பிரிட்டோவை கல்லூரி விடுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருப்பது கல்லூரியின் மதிப்பிற்கு மேலும் கேட்டினை ஏற்படுத்தும் செயலாகும்.

தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் கல்வி அறிவு பெற்று முன்னேற அருந்தொண்டாற்றி வரும் லயோலாக் கல்லூரி தமிழர்களுக்கு இன்னல் நேர்ந்த போது தமிழர் பக்கம் நின்று நியாயத்திற்கு குரல் கொடுத்தது என்பதே வரலாற்றில் அக்கல்லூரிக்குப் பெருமை சேர்த்தது. ஆனால் இன்று நீதியின் பக்கம் துணிச்சலுடன் நிற்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் லயோலாக் கல்லூரி தனது பெருமைக்கு தானே களங்கம் தேடிக் கொள்ள வேண்டாம் என வேண்டுகிறோம்.

மேலும் ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களையும் அதற்கு துணையாக நின்றதாக இயக்குநர் வ. கவுதமனையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கறோம். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பில் கோருகிறோம்.

இவ்வாறு சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago