முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி அலை வீசுவதாகக் கூறுவது வெறும் பிரமை

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, டிச.23 - ஐந்து மாநில தேர்தல்களுக்குப் பிறகு பாஜக கை ஓங்கிவிட்தாதக் கூறுவது வெறும் பிரமை என்று தயாநிதி மாறன் எம்.பி. கூறினார். மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஆரப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது:

அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகளை வைத்து பாஜகவின் கை ஓங்கிவிட்டதாகவும், நரேந்திர மோடி பிரதமராவதற்கான வாய்ப்புகள் கை கூடி விட்டதாகவும் ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தைப் பொ றுத்தவரை காங்கிரஸூம், பாஜகவும் மாறி, மாறி ஆட்சியைப் பிடித்து வந்தன. மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக  காங்கிரஸ் கட்சி பலவீனமாகவே இருக்கிறது. நாட்டின் அரசியல் நிலைமையை நிர்ணயிக்கும் சக்திமிக்க மாநிலம் சத்தீஷ் கர் அல்ல. டெல்லி மாநில தேர்தல் முடிவு மட்டுமே அனைவராலும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.  அங்கும் பாஜக, காங்கிரஸ் என இரு பிரதான கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இப்படி யிருக்க  பாஜகவின் கை ஓங்கி இருக்கிறது. மோடி அலை வீசுகிறது என்ற ஊடக ங்களின் பிரச்சாரம் வெறும் பிரமை மட்டுமே. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான் மையினருக்கு பாதுகாப்பு இருக்காது. எந்த நன்மையும் கிடைக்காது என்றார். 

மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு  முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி முன்னாள் அமைச்சர் தமிழரசி, மதுரை மாநகர் மாவட்ட 4_வது பகுதி செயலாளர் ஜெயராம் உள்ளிட்டோர் பேசினர். இந்த கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

                                              

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்