எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.21 - சட்டமன்ற பேரவை செயலகம் உட்பட 36 துறைகளில் 6 துறைகள் மட்டுமே புதிய கட்டடத்தில் இருக்கிறது. எஞ்சிய 30 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளதால் 2 தலைமை செயலகங்கள் நிர்வாக நலனுக்கு ஏற்றதல்ல என்று, புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட முடிவு எடுத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய கட்டடத்தில் 2-வது பிளாக் இன்னும் கட்டி முடிக்க 1 ஆண்டாகும் என்றும், அண்ணாசாலையில் போக்குவரத்து நேரிசலை தவிர்க்க ரூ.500 கோடியில் திட்டமிடப்பட்ட 2 மேம்பாலங்கள் கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கவே இல்லை என்றும், இதனால் பழைய கோட்டையில் செயல்பட முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றும், அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றும், அதனை தொடர்ந்து தமிழகத்தின் துயர் துடைக்கும் வண்ணம் கழக ஆட்சி அமைந்துள்ளது. மக்கள் விடுதலை பெற இந்த ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதே எனது முதல் நோக்கமாகும். அந்த விதத்தில் தான் ஆட்சி பொறுப்பேற்ற முதலத் நாளே மக்கள் நலன் பெறும் ஏழு புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன். மக்கள் நலன் ஒன்றேயே கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நடவடிக்கையும் எப்பொழுதும் அமைத்து கொண்டுள்ளேன்.
தமிழக சட்டமன்ற மற்றும் தலைமை செயலகம் தற்போதுள்ள புதிய கட்டத்திலிருந்து ஏற்கனவே இயங்கி வந்த புனித ஜார்ஜ் கோட்டியில் உள்ள கட்டடத்திற்கு மாற்ற நான் உத்தரவிட்டதன் அடிப்படையில் அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று கொண்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றமும் தலைமை செயலகமும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இயங்கிட வேண்டுமென்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் இந்த புதிய கட்டடம் முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்ட கட்ட்டடம் என்பதால்தான், நான் அதனை மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எந்த நடவடிக்கையும் நான் எப்பொழுதும் எடுத்ததில்லை என்பது நடுநிலையாளர் அனைவரும் அறிந்ததே. சென்ற முறை நான் தமிழக முதல்வராக இருந்தபோது, புதிய தலைமை செயலக கட்டடம் கட்டுவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு எல்லாம் மத்திய அரசில் அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, கருணாநிதியின் தூண்டுதலால் எவ்வாறெல்லாம் தடை ஏற்படுத்தினார் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே. எனது அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் அவ்வாறு தடையை ஏற்படுத்திவர்கள்தான், பின்னர் புதிய தலைமை செயலக கட்டடத்தினை கட்டியுள்ளனர். அவ்வாறு தலைமை செயலகத்திற்கு புதிய கட்டடம் கட்டடப்பட்டுள்ளதை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. எனினும், தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக கட்டடத்திலிருந்து பணியாற்றுவது அரசு பணிக்கும் நிர்வாகத்திற்கும் ஊறு விளைவிக்கும் என்பதால் தான் புதிய தலைமை செயலக கட்டடத்திலிருந்து பணிபுரிய நான் விரும்பவில்லை.
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலகம் 2008-ம் ஆண்டு முடிவில் துவங்கப்பட்டு கட்டடப் பணிகள் முழுமையாக முடிவடைமாமலேயே 2010-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்க விழா நடத்தப்பட்டது என்பது எல்லோருக்குமே தெரியும். புதிய தலைமை செயலகத்தின் மேற்கூரை கோபுரம் கட்டி முடிக்கப்படாமலேயே தற்காலிக செட்டிங் போடப்பட்டு, அதற்கே 3 கோடி ரூபாய்க்கு மேல் வீணடிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே. 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்கி வைக்கப்பட்ட கட்டடம் முழுமையடைந்த கட்டடமாக இருந்ததிருந்தால் ஏன் முந்தைய அரசு அன்றைய தினம் முதலே அரசு துறைகளை புதிய கட்டட்திற்கு மாற்றவில்லை?
2010-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே புதிய கட்டிட துவக்கி விழாவினை நடத்திய காரணத்தால் சட்டமன்ற செயலகம் அப்போதிலிருந்தே புதிய கட்டத்தில் செயல்படத் தொடங்கியது.
19.3.10 அன்று புதிய கட்டடத்தில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றபோது, சட்டமன்ற தரையில் புதிய திரைச்சீலை ஒன்றினால் சுவர்கள் மறைக்கப்பட்டும், தற்காலிக இருக்கைகள் அமைக்கப்பட்டும் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற பேர ைதலைவர் இருக்கையும் கூட தற்காலிகமாக உயர்த்தப்பட்ட மேடையில் நிறுவப்பட்டது.
கட்டடம் முழுமை பெறாமலேயே திறப்பு விழா நடைப்பெற்றதை மக்கள் குறை கூறிய காரணத்தால் அவசர கோலத்தில் ஒரு சில துறைகல் மட்டும் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. மேலும், தங்களது ஆட்சியை மக்கள் தூக்கியடித்துவிடுவார்கள் என்பதை நன்கு உணர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, புதிய கட்டடத்திலிருந்து, தான் பதவி இறங்குவதற்கு முன் பணிபுரிய வேண்டும் என்றே ஒரு எண்ணத்தில் தான், முழுமையாக கட்டி முடிக்கப்படாத கட்டடத்திலிருந்து செயல்பட அவசர முடிவு எடுத்தார். எனவே தான் அப்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரது இலாக்காக்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மட்டும் புதிய தலைமை செயலக கட்டடத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது. அவையும் முழுமையாக கொண்டு செல்லப்படவில்லை. டிசம்பர், 2010-க்கு பிறகே நான்கு அரசுத் துறைகள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சட்டமன்ற தேர்தலுக்கு பிறகுதான் மாற்றப்பட்டது. முன்னாள் துணை முதல்வர் பொறுப்பிலிருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாற்றப்படவேயில்லே. இந்த புதிய கட்டடத்தில் சட்டமன்ற செயலகத்துறை, பொதுத்துறை, உள்துறை, தொழில்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை ஆகிய துறைகள் மட்டுமே மாற்றப்பட்டன.
மேலும், அப்போதைய அனைத்து அமைச்சர்களின் அறைகளும் மாற்றப்பட்டன. தலைமை செயலகத்தின் அனைத்து துறைகளும் மாற்றப்படாமல், அள்ளித்தெளித்த அவசரக் கோலத்தில் முந்தைய அரசு இரண்டு தலைமை செயலகங்களிலிருந்து செயல்பட்டு கொண்டிருந்தது. அதாவது, புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயல்படும் தலைமை செயலகம் ஒன்று, புதிய கட்டடத்தில் தலைமை செயலகம் ஒன்று என இரண்டு தலைமை செயலகங்கள் இயங்கி கொண்டு வந்தன.
மாற்றப்பட்ட துறைகளை தவிர, மேலும் ஒரு துறை மட்டும் செயல்படுவதற்கு தான் புதிய கட்டடத்தில் இடவசதி உள்ளது. இரண்டாம் பிளாக் முடிக்கப்பட்டால் தான் எஞ்சியுள்ள துறைகளுக்கு இடவசதி இருக்கும். அந்த இரண்டாவது பிளாக் கட்டடம் கட்டி முடிக்க இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும்.
சட்டமன்ற பேரவை செயலகம் உட்பட 36 துறைகளுள், வெறும் 6 துறைகள் மட்டும் புதிய கட்டடடத்திலிருந்தும், எஞ்சிய 30 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்தும் செயல்பட்டால் அரசு இயந்திரத்தை செம்மையாக நிர்வகிக்க முடியுமா?
நிர்வாக வசதிகளை புறந்தள்ளிவிட்ட காரணத்தால் தான், முழுமை அடையாத கட்டடத்திலிருந்து செயல்பட்டு கொண்டிருந்தார்கள். தற்போதும் அவ்வாறு இரண்டு தலைமை செயலகங்களிலிருந்து செயல்படுவது நிர்வாக நலனுக்கு ஏற்றதா என்பதை தமிழக மக்கள் தான் கூற வேண்டும். துறை அமைச்சர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலும், துறை செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் மிறிதொரு கட்டடத்திலிருந்தும் செயல்பட்டால், அரசு இயந்திரம் முழுமையாக செய்பட இயலுமா?
தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதி பூண்டுள்ளேன். அவ்வாறு மக்கள் நலத்திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டுமெனில் அனைத்து தலைமை செயலக துறைகளும் ஒரே இடத்தில் செயல்படுவது தான் சரியானது ஆகும். அமைச்சர் பெருமக்கள் அரசு அலுவலர்களுடன் விவாதிக்க அவர்களை 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கட்டடத்திலிருந்து ஒவ்வொரு முறையும் வரவழைப்பதும், அமைச்சர்கள் பார்க்க வேண்டிய கோப்புகளையும் அவ்வாறு தொலைவிலுள்ள கட்டடத்திலிருந்து பெறுவதும், காலவிரையும், பொருள் விரையம் மற்றும் நிர்வாக குறைபாட்டை தானே ஏற்படுத்தும்?
தற்போது கட்டடப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் இன்னமும் முழுமையான வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படவில்லை. மின் தூக்கிகள் கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த கட்டடத்தின் மேல்மாடிகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், புதிய தலைமை செயலக கட்டடம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்படுவதற்கு பல வணிகர்கள், குறிப்பாக ரிட்சி தெருவில் மின்னணு சாதனங்கலை விற்கும் வணிகர்களும், புதுப்பேட்டையிலுள்ள மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தே வந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக விரைவில் அந்த கடைகள் அங்கிருந்து காலி செய்யப்பட்டுவிடும் என்ற அச்சத்திலேயே அவர்கள் இருந்தனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையின் மத்திய பகுதியிலுள்ள அண்ணா சாலையில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளதால், தலைமை செயலகத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் மிகுந்த இடர்பாடு ஏற்படுகிறது. எனவே, மேம்பாலங்கள் கட்டப்படாமல் தான் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை தவரிக்கலாம் என்பதை உணர்ந்து, முந்தைய அரசு, மேம்பாலங்கள் கட்டப்படும் என்று 2010-11-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அறிவிப்புகளிலும் தெரிவித்திருந்தது. 2010-2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அண்ணா சாலையுள்ள சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் மேம்பாலங்கள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் நிதி ஆதாரங்களை பயன்படுத்தி கட்டப்படும் என குறிப்பிடப்பட்டது. மேலும், 2010-11-ம் ஆண்டு அத்துறை சார்ந்த அறிவிப்புகளில், சென்னை அண்ணா சாலையில் மேம்பாலங்கள் என்ற தலைப்பில், ரூ.500 கோடி மதிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தில், அண்ணா சாலையில் புதிய சட்டப்பேரவை வளாகத்திற்கும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு இடையே துவங்கி பட்டுலாஸ் சாலை சந்திப்பு வரை சுமார் 2.00 கிமீ நீளத்திற்கும், அண்ணா அறிவாலயம் அருகே துவங்கி சைதாப்பேட்டை மாம்பலம் கால்வாய் வரை சுமார் 3.00 கி.மீ நீளத்திற்கும் இரண்டும் சாலை மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. சாலை மேம்பாலம் துவங்கப்படாத நிலையில், புதிய தலைமை செயலக பகுதியிலுள்ள அண்ணா சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவே இயலாது.
இவ்வாறு நிர்வாக வசதியே இல்லாமல், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒரு பக்கமும், பல துறைகள் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலும் இயங்கி வந்தால், அரசை நிர்வகிக்க இயலாது என்தால் தான் சட்டமன்றம் மற்றும் அரசுத்துறைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்க வேண்டும் என்பதால், புனித ஜார்ஜ் கோட்டயில் எனது பணியை தொடருவேன் என்று தேர்தலின்போதே நான் அறிவித்திருந்தேன். எனவே, நிர்வாக நலன் கருதி நான் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தே செயல்பட முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்