முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரியாக தேவயானி அறிவிப்பு

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க்,  டிச.24 - அமெரிக்க சட்டத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேவயானி  கோப்ரகடேவை ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரியாக அதிகாரப் பூர்வமாக இந்தியா அறிவித்துள்ளது. தூதரக அதிகாரிக்கு வழங்கப்படுவது போன்று  தேவயானிக்கு சிறப்புரிமைகள் சடேட விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐ.நா.வுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தேவயானியை அமெரிக்க சட்டத்திலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக  ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி ஐ.நா. பொதுச் செயலாளர் பான்_ கீ_மூனுக்கு தேவயானி விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் தேவயாநி ஐ.நா. சபைக்கான இந்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தூதரக அதிகாரிகளுக்கான சிறப்புரிமைகள், அமெரிக்க சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா. சபையின் துணை பொதுச் செயலாளர் ஜேன் லியாசனையும்  அசோக் முகர்ஜி நேரில் சந்தித்து தேவயானி விவகாரம் தொடர்பான இந்தியாவின்  கோரிக்கைகளை வலியுறுத்தினார்.  இந்தி யாவின் கோரிக்கை மீது உரிய நடவடிக் கை எடுக்கப்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. தேவயானிக்கு சட்ட விலக்கு அளிப்பது தொடர்பான கோப்புகளை அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பி வைத்திருப்தாகவும் இனிமேல் இந்த விவகாரம் அமெரிக்கா_ஐ.நா. சபை இடையிலானது எந்றும் அவர் கூறினார்.                                       

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்