முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான நிலையத்தில் அமெரிக்க டாலரை கடத்தியவர் கைது

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.26 - சென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி அமெரிக்க டாலரை கடத்திய கொரிய நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார் 

சென்னை விமானநிலையத்தில் ஹாங்காங் நாட்டிற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கடத்திச்செல்ல முயன்ற கொரிய நாட்டு வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங் நாட்டிற்கு செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். கொரிய நாட்டைச் சேர்ந்த யோன் கியோல் (வயது 32) என்பவர் விமானத்தில் செல்ல வந்திருந்தார்.

அவரது சூட்கேசை ஸ்கேனில் மத்திய தொழிற்படையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் கறுப்பு நிற பை ஒன்று இருப்பதை கண்டனர். இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.

சுங்க இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தன. ஒரு லட்சத்து 55 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இதை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர். கொரிய நாட்டு வாலிபர் யோன் கியோல் விமான பயணத்தை ரத்து செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

இந்த பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? பிடிபட்டவர் ஹவாலா பணத்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவாரா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்