முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தாவுடன் நடந்தே சென்ற லட்சக்கணக்கான தொண்டர்கள்

சனிக்கிழமை, 21 மே 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,மே.21 - முதல்வர் பதவியை ஏற்றவுடன் பொறுப்பு ஏற்க தலைமை செயலகத்திற்கு நடந்தே சென்ற மம்தா பானர்ஜியுடன் லட்சக்கணக்கான தொண்டர்களும் நடந்தே சென்றனர். மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் முதல்வராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். காங்கிரஸை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். பதவி ஏற்பு விழா முடிந்தவுடன் பொறுப்பை ஏற்பதற்காக மம்தா பானர்ஜி தலைமை செயலகத்திற்கு சென்றார். அங்கு மம்தா செல்லும்போது காரில் செல்லவில்லை. பதவி ஏற்பு விழா நடந்த இடத்தில் இருந்து தலைமை செயலகம் வரை அவர் நடந்தே சென்றார். கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்ற பானர்ஜியுடன் காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் நடந்தே சென்றனர். அவர் கோப்பில் கையெழுத்துப்போட்டு திரும்பும் வரை உடன் சென்ற தொண்டர்கள் மம்தாவை வாழ்த்தி கோஷம் போட்டுக்கொண்டே இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்